வளைந்து
நெளிந்து
ஏறும்
படிகள்.
சுற்றியிருக்கும் கட்டிடங்களின்
நிழல்களை
இழுத்து
தின்று கொண்டிருக்கிறது
இருள்.
யாருமற்ற
அடுக்கு மாடி கட்டிடத்தில்
மனிதர்களின்
கடும் வாடை.
பழுப்பேறிய கதவுகளுக்குப்
பின்னால்
ஒளிந்திருக்கின்றன
வீடுகள்
ஒவ்வொரு தளத்திலும்.
மங்குகிறது
பார்வை.
பலவீனமாகிறது
இருதயம்.
பிசையும் வலி
எலும்பு இணைப்புகளிலெல்லாம்.
எங்கோ ...
காதலர்களின் சண்டை.
பூனையின் முணுமுணுப்பு.
சிணுங்கும் விளக்கின் ஓசை.
... பிரமையா?
எதோ ஒரு தளத்தில்
எதோ ஒரு கதவிற்குப் பின்னால்
கேட்டேன்
விசும்பல்
சத்தம்.
புகை விலகிய பார்வையோடு
குதித்து ஆடும் இருதயத்தோடு
மூச்சை இழுத்துப் பிடித்துத்
தட்டுகிறேன்,
தட்டி கொண்டே
இருக்கிறேன்.
நான் எழுப்பும்
ஒவ்வொரு சத்தத்திற்கு
இடையிலும்
வலிமையுடன்
உறுமுகிறது
→ மௌனம்.
