என் ஓவியங்களிலே சிறந்தது
என்னுடைய அறுப்பட்ட காது தான்.
பேரிரைச்சலையும்
நரம்புகள் எங்கும் முறுக்கும் வலியையும்
சிறிது நேரமாவது தொலைத்திட வைக்கும்
அருள் நிறைந்தது அது.
பரத்தையர் இல்ல பணிப்பெண்
முரட்டுக் காட்டில் மலர்ந்த காந்தள் மலர்.
காந்தள் மலருக்குப் பரிசளித்தேன்
என் ஓவியத்தை.
