ஆதவன் மறைவதற்கு முன்
நிழல் உருவமாய் மாறும் கருத்த மலை போல
நின்று இருந்தது கஜேந்திரன் எனும் யானை.
சேறும் சுழலுமாய் ஏரி நீரோட்டம்.
காலைக் கடிக்கும் முதலை.
தீராத வலியோடு ஏரிக் கரையைப் பார்த்தபடி தத்தளித்தது.
பெருமாள் தோன்றவே இல்லை.
சந்தேகம், அச்சம், பக்தி.
உயிர் போகும் என உணரும் கணத்தில்
கஜேந்திரன் தன் காதை அறுத்து வானத்தை நோக்கி எறிந்தது.

Leave a Reply