• நாங்கள் சில நூறு பேர் இருந்தோம்.
    ஏழெட்டு மின்னல் கீற்றுகள்
    ஒரே சமயத்தில் வானத்தில் தோன்றுவதை பார்த்தோம்.
    அடர் கருப்பினூடாக அந்த மின்னல் கிழிசல்கள்
    அவரது வருகைக்கு முன்னுரை எழுதின.

    குழந்தை அழும் சத்தம்.
    அதை அதட்டும் ஒலி.
    அழுகை கட்டுபடாமல் பெரும் சத்தமாகி
    தொற்று போல பலருக்கும் பரவுகிறது.
    ஒரு பெண் தேம்பி தேம்பி அழுகிறாள்.
    முதியவர் சரிந்து தரையில் விழுகிறார்.
    ஒரு கூட்டுப் பாடல் போல அழுகை ஒலி
    பெரும் வடிவெடித்து வெடிக்கிறது.

    ஒரு பாம்பு நெளிவது போல
    எங்களுக்கு அடியில் பூமி நெளிகிறது.
    ஒரு பெண் பயந்து அலறுகிறாள்.
    காற்று எங்களது முகத்தில் மழைத்தூறலை வீசி அடிக்கிறது.
    கண்ணிமைக்கும் நேரத்தில் அது நிகழ்ந்தது.


  • கடும் தண்ணீர் தட்டுபாடு, அச்சுறுத்தும் மழைக்காலம், டெண்ட் கூரைகளை பெயர்த்தெடுக்கும் பலத்த காற்று, கழிவறைகள் வழிந்து வாழும் டெண்ட்களுக்கு இடையில் ஓடும் சுகாதாரமற்ற நிலை, இட நெருக்கடி, ராணுவத்தினர் செய்யும் சித்ரவதைகள், அவ்வபோது ராணுவத்தினரால் காணாமல் போகும் முகாம்வாசிகள், முடக்கபட்ட சுதந்திரம் என்று தற்போது இலங்கையில் உள்ள தமிழர் முகாம்கள் பெரும் அவல நிலைக்கு ஆளாகி இருக்கிறது. இதற்கு ஆதாரமாய் அங்கு நடக்கும் விஷயங்கள் பற்றிய நேரடி சாட்சியங்களை Human Rights Watch என்கிற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில் சமீபத்தில் வெளியிட்டது. அதன் சுருக்கம் கீழே கொடுக்கபட்டு இருக்கிறது.

    இலங்கையில் இன்று இரண்டறை லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் சிறை வைக்கபட்டு இருக்கிறார்கள். ஐ.நாவின் கூற்றுபடி சரியாக 2,55,551 பேர். வவூனியா மாவட்டத்தில் உள்ள மானிக் முகாமில் தான் அதிகமானோர் தங்க வைக்கபட்டிருப்பதாக தெரிகிறது.

    மானிக் முகாமிற்கு அருகே உள்ள ஒரு நதியில் இருந்து பைப்லைன் மூலமாக தான் தண்ணீர் முகாமிற்கு அளிக்கபட்டு வந்தது.… …மேலும் வாசிக்க


  • பக்கத்தில் படுத்திருக்கும் பெண்
    யாரென தெரியவில்லை.
    இருளை அகற்ற சுவிட்ச்
    எங்கிருக்கிறது என புரியவில்லை.
    இது என் வீடுமில்லை.
    இங்கு இதற்கு முன் வந்ததாய்
    ஞாபகமும் இல்லை. 

    என் துணிகளை தேடி
    தரையில் கைகளால் துளாவிய போது
    மீண்டும் வந்தது
    மண்டைக்குள் அந்த நெளியும் புழு.

    கண்கள் இருட்டின.
    காதிலிருந்து இரத்தம் வழிந்தது.
    அந்த புழு பெருத்து கொண்டு இருக்கிறது.
    உடலெங்கும் வலி வியாபித்தது.
    விஷ முற்கள் கடகடவென
    உடலெங்கும் முளைக்க தொடங்குகின்றன.

    முதுகு தண்டினில்
    மற்றொரு புழு இப்போது நகர தொடங்குகிறது.
    தரையில் படுத்து துடிக்கிறேன்.
    எழுந்து நின்றால் சற்று வலி குறையும் என
    எழுந்து நிற்கிறேன்.

    எதையும் அறியாமல் நிர்வாணமாய்
    தூங்கி கொண்டிருக்கும் அந்த பெண் யார் என
    இப்போதும் புலப்படவில்லை.

    காற்று தான் வலியை கொண்டு வருகிறதா?
    ஜன்னலில் எட்டி பார்த்தேன்.
    நான் நிற்பது கட்டாயம்
    பத்து அல்லது பதினைந்தாவது மாடியாவது இருக்கும்.
    இது கட்டாயம் என்னுடைய நகரமல்ல.…மேலும் வாசிக்க


  • இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சனை எது?

    • பாகிஸ்தானுடன் நீடிக்கும் மோதல் மனபோக்கு
    • நாட்டினுள் ஊடூருவி தொல்லை கொடுக்கும் தீவிரவாதிகள்
    • உள்நாட்டு கலவரம் செய்யும் மாவோயிஸ்ட்டுகள்
    • கட்டுபடுத்த இயலா விலையேற்றம்
    • அரசு நிர்வாகத்தை அரித்து தின்று கொண்டிருக்கும் லஞ்சம்
    • சாதி பாகுபாடும் தலித் மற்றும் மலைவாசி மக்கள் மீதான வன்முறைகளும்

    என்னை கேட்டால் சாதி தான் இந்தியாவின் மைய பிரச்சனை என்பேன். ஆயிரமாயிரம் காலமாய் சாதியால் எழுப்பப்பட்டு வந்த இந்த சமூகம் இன்று சாதிய பாகுபாடுகளால் அவலத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு சாட்சியாக இன்றும் இந்தியா எங்கும் சாதி பாகுபாடு காரணத்தால் எக்கச்சக்க வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இதில் பெரும்பாலனவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கபடுவதில்லை என்பது ஒரு பக்கம். பல சமயங்களில் பாதிக்கபட்டவர்களே காவல்துறையால் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் அல்லது கைது செய்யபடுகிறார்கள்.

    மத்திய பிரதேச சம்பவம்

    மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கிறது சிவ்புரி மாவட்டம். தலித்களுக்கு எதிரான வன்முறைகள் இங்கு அதிகம் நடப்பதுண்டு. சவ்புரியில் வசிக்கும் நாராயண் சிங் என்னும் 56 வயது தலித் ஒருவர் இந்த வாரம் உயிரோடு எரிக்கபட்டார்.… …மேலும் வாசிக்க


  • கருணாநிதி மீண்டும் கோரிக்கை
    நேற்று அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் மாநில சுயாட்சி பற்றி பேச்சை எடுத்து இருக்கிறார். தி.மு.கவின் தொடக்க காலத்தில் மாநில சுயாட்சி முக்கிய கொள்கையாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அதை அப்படியே மறந்து விட்டார்கள். எப்போதாவது இது போல கருணாநிதி மட்டும் இதை எங்காவது சொல்லி டெல்லிக்காரர்கள் வயிற்றில் புளியை கரைப்பார். ஆனால் இது வெறும் பூச்சாண்டி விஷயம் என இப்போது எல்லாருக்கும் தெளிவாகி இருக்கும்.

    மாட்டி கொண்ட பிரணாப்
    பாவம், பிரணாப் முகர்ஜியும் மேடையில் மாட்டி கொண்டார். 1970-ம் ஆண்டு தமிழகம் வந்த பிரணாப் எப்படி எல்லாம் அன்று மாநில சுயாட்சிக்காக வாதிட்டார் என்பதை கருணாநிதி நேற்று மேடையில் பேசிய போது பிரணாப் அதை கேட்டு அமைதியாய் இருந்தார் என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள்.

    “அன்று நாம் சேர்ந்து போராடினோம். இன்று நீங்கள் கொடுக்கிற இடத்தில் இருக்கிறீர்கள்,” என்று கருணாநிதி பேசியது பிரணாப்பிற்கு ஏண்டா இங்க வந்தோம் என்கிற எண்ணத்தை உண்டு செய்திருந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.… …மேலும் வாசிக்க


  • எதிர்படும் ஒவ்வொருவரின் கண்களிலும்
    ஒளிந்திருக்கிறது
    கார்முகிலென சோகம்.

    புன்னகையால் அவர்கள் தங்களது துயரத்தை
    மறைக்க முயல்கிறார்கள்.
    எனினும் அது எப்போதும் சாத்தியபடுவதில்லை.

    வெளிவரும் அரிய கணங்களில்
    ஒருவரது சோகம்
    மற்றவரையும் தொற்றி கொள்கிறது.
    அதனோடு குண்டூசிகளாய் குத்துகின்றன
    ஏன் ஒளித்து வைக்கிறீர்கள் என்கிற
    துன்பம்.


  • வெற்றியின் களிப்பு ஒரு போதை. தன்னை தானே மறக்க வைத்து, அதிகமான தேனை அருந்திய வண்டாக, மயக்கமாய் சுற்றி வர செய்கிற விஷயம்.

    1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் நாள். அமெரிக்க அதிபர் ட்ரூமென், ஜப்பான் தோல்வியை ஏற்று சரணடைந்ததை அடுத்து அன்று காலை ஏழு மணிக்கு அதிகாரப்பூர்வமாக இரண்டாம் உலக போர் முடிவிற்கு வந்ததை அறிவித்தார். போர் வெற்றி அமெரிக்கா நாடெங்கும் கொண்டாடபட்டது. நாடு ஜெயித்து விட்டதே என்கிற எண்ணம் ஒரு புறம். இனி இந்த போர் முடிவிற்கே வராதா என்று கடந்த ஏழு வருடங்களாய் உலகை உலுக்கி கொண்டிருந்த அசுர நிகழ்வு முடிந்து விட்ட மகிழ்ச்சி. படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் என எல்லாரும் அளவுகடந்த சந்தோஷத்தில் இருந்தனர்.

    அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூ யார்க் நகரத்திலும் வெற்றி எல்லா இடங்களிலும் கொண்டாடபட்டு கொண்டிருந்தது. இராணுவ வீரர்கள் அளவிற்கு அதிகமாக மதுவை குடித்து விட்டு நகரமெங்கும் சுற்றி கொண்டிருந்தார்கள். ஆல்பிரட் எய்ஸ்டென்ட் என்கிற புகைப்படக்காரர் வீதிகளில் மிதக்கும் புகழ் போதையையும் அதன் விளைவாய் மக்கள் என்றுமில்லாமல் வித்தியாசமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருப்பதையும் புகைப்படமாக எடுத்தபடி இருந்தார்.… …மேலும் வாசிக்க


  • இன்று கம்யூனிஸ்ட் தலைவர் [சிபிஎம்] பிருந்தா காரத் உத்தபுரம் கிராமத்திற்கு சென்றார். அதற்கு முன்பு காலையில் காவல்துறையினர் அவரையும் அவருடன் இருந்த காம்ரேடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து இருக்கிறார்கள்.

    உத்தபுரம் கிராமத்தில் நிலவும் பிரச்சனை பற்றி அறியாதவர்கள் இங்கே படிக்கவும்.

    சமீப காலமாக காம்ரேடுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க தலித் பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். முக்கியமாக சிபிஎம் கட்சியினர். உத்தபுரம் கிராமம் விஷயத்தில் கூட பிரகாஷ் கரத் தொடங்கி பலர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது கட்டாயம் பாராட்டபட வேண்டிய விஷயம். என்றாலும்…

    கம்யூனிச கட்சிகளில் சாதி பாகுபாடு பல ஆண்டுகளாக இருக்கிறது என பல சமயங்களில் பல தலித் நல ஆர்வலர்கள் சுட்டி காட்டி இருக்கிறார்கள். காலம் காலமாக உயர்சாதியினர் மட்டுமே கட்சியின் உயர் பொறுப்புகளை பிடித்து இருந்தார்கள் என சொல்லபடும் குற்றசாட்டை அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட முடியாது. அப்படி இருக்க இன்று கட்சி நலிவுறும் சமயத்தில் தனது பிடியை இறுக்கி கொள்ள இந்த வகை நடவடிக்கைகளில் காம்ரேடுகள் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்களா என்கிற கேள்வி எழுப்புவதில் தவறு ஒன்றும் இல்லை.… …மேலும் வாசிக்க


  • கோலி குண்டுகளாய் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள்
    உருண்டோடும் பரந்த நகரத்து சாலை.
    எப்போதும் போல  இப்போதும் டிராபிக் ஜாம்.

    இந்த முறை காரணம் ஒரு கிழவி.
    பொறுமையில்லாமல் ஹாரண் ஓலி அலறுகிறது.
    சாலையை கடக்க வந்த கிழவி சாலையிலே அமர்ந்து விட்டாள்.
    பல பேர் கத்தி கொண்டிருக்கிறார்கள்.

    பைத்தியமா அவள்?

    சாலையில் என்னவோ செய்து கொண்டிருக்கிறாள்.
    அவளருகே அறுந்து போன மஞ்சள் பை.
    சாலையில் பையிலிருந்து கொட்டிய அரிசி.
    வசையொலி கூடியபடி இருக்கிறது.
    அரிசியை அள்ளி மீண்டும் பையினுள் திணித்து விடும்
    முனைப்பில் இருக்கிறாள் கிழவி.


  • ப.சிதம்பரம் ஏற்கெனவே கோட்டிட்டு காட்டினார். இப்போது இங்கிலாந்து தொடங்கி மற்ற உலக நாடுகளும் தங்களுடைய எண்ணத்தை வெளிபடுத்த தொடங்கி விட்டனர்.

    நடராஜா. விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர். இங்கிலாந்தில் வசித்து வரும் இவரை அந்நாட்டு அரசாங்கம் பலவந்தமாக இலங்கைக்கு அனுப்ப முயற்சித்தது. இலங்கை மண்ணில் கால் வைத்தால் தனது உயிருக்கு எந்தவித பாதுகாப்புமில்லை என இவர் மன்றாடியும் பயனில்லை. இறுதி முயற்சியாக இவர் அங்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் காரணமாக இவரை இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டு இருக்கிறது.

    தனக்கு நேர்ந்தது போல பல தமிழர்களுக்கு இந்த பலவந்தமான வழியனுப்பு விழா நடந்திருக்கிறது என நடராஜா குற்றம் சாட்டுகிறார். இந்த வருடம் ஜூலை மாதம் மட்டும் பனிரெண்டு தமிழர்கள் இப்படி நாடு கடத்தபட்டதாக மேற்கு லண்டனில் உள்ள தமிழ் அமைப்பை சார்ந்த நகுலேந்திரன் என்பவர் பிபிசியில் குற்றச்சாட்டு எழுப்பி இருக்கிறார்.

    இலங்கையில் நடைபெறும் அரசு பயங்கரவாதத்தை கண்டிக்கும் நாடுகளில் ஒன்றான இங்கிலாந்திலே இப்படியான ரகசிய வேலைகள் இலங்கை அரசின் பழி வாங்குதலுக்கு சாதகமாக நடக்கிறது என்றால் இலங்கையின்  நேச நாடுகளில் நிலைமை எப்படி இருக்கும் என சொல்லவே வேண்டியதில்லை.… …மேலும் வாசிக்க