காமம்
ஆடு தாண்டி விடும் ஓடை.
சன்னமாய் ஓடுகிறது.
நீரைக் கையில் ஏந்தி பார்க்கிறேன்.
ஒளியினைத் தின்றபடி பிரகாசிக்கிறது.
பருகினால் மதுவின் சுவை.
கால் வைத்து இறங்கினால்
நீருக்கடியில்
மலை உயர ஆழம்.
மூச்சிறைத்து பிழைத்து வந்தால்
மேலெல்லாம் மதுவின் வாசம்.
பருகுதலும்..
ஆழம் பார்க்க இறங்குவதும்…..
பருகுதலும் ஆழம் பார்க்க இறங்குவதும் … வேண்டாமென நினைத்தாலும் திரும்ப வரும் மனித இயல்பு?
………..சலிப்பு சலித்தபின் வேண்டுதல் மனித இயல்புதான்…
மதுவின் வாசத்தில் மனம் தள்ளாட
சிற்றின்பம் என்போரே பரந்த மனமில்லை உங்களுக்கு!