காமம்

ஆடு தாண்டி விடும் ஓடை.
சன்னமாய் ஓடுகிறது.
நீரைக் கையில் ஏந்தி பார்க்கிறேன்.
ஒளியினைத் தின்றபடி பிரகாசிக்கிறது.

பருகினால் மதுவின் சுவை.
கால் வைத்து இறங்கினால்
நீருக்கடியில்
மலை உயர ஆழம்.

மூச்சிறைத்து பிழைத்து வந்தால்
மேலெல்லாம் மதுவின் வாசம்.


Comments
4 responses to “காமம்”
  1. பருகுதலும்..
    ஆழம் பார்க்க இறங்குவதும்…..

    1. பருகுதலும் ஆழம் பார்க்க இறங்குவதும் … வேண்டாமென நினைத்தாலும் திரும்ப வரும் மனித இயல்பு?

      1. ………..சலிப்பு சலித்தபின் வேண்டுதல் மனித இயல்புதான்…

  2. IlayaDhasan Avatar
    IlayaDhasan

    மதுவின் வாசத்தில் மனம் தள்ளாட
    சிற்றின்பம் என்போரே பரந்த மனமில்லை உங்களுக்கு!

Leave a Reply to Sai Ram Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.