பாதி ஐயம்.
பாதி பரிதவிப்பு.
அவனைக் கடைசியில்
ஒரு ரயில் நிலையத்தில் சந்தித்தேன்.
வெள்ளைச் சட்டையில்
மெல்லிய சிகப்பு கோடுகள்.
கறுப்பு என்று சொல்லி விடலாம்
அவன் அணிந்திருந்த கருநீல பேண்ட்டை.
கொஞ்சமும் கசங்காத உடை.
சிதறாத முடி.
பளிச்சென்ற முகம்.
எதோ உயர் அதிகாரி தோற்றம்.
வேறொரு நாளாக இருந்தால்
கிண்டலும் எரிச்சலும்
இருந்திருக்க கூடும்.
இன்று
பதற்றம் மட்டுமே.
எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல்
செயற்கையாக புன்னகைத்து
தேவையில்லாமல்
செல்போனைத் துளாவி கொண்டிருக்கிறேன்.
என்றும் போல
இன்றும் கூட்டமாய் இருக்கிறது
ரயில் நிலையம்.
நகரத்திற்குள்ளாக
இரண்டடுக்கு மாடி உயர
பாலத்தில்
சுற்றி சுற்றி வரும்
ரயில்கள்.
எத்தனையோ முகங்கள்.
எத்தனையோ உணர்ச்சிகள்.
அத்தனையும் வாரி போட்டு கொண்டிருக்கிறது
ரயில்.
“வா பயணித்தபடி பேசுவோம்.”
அவன் ஏறிய பின்னர்
தயங்கி தயங்கி
இறுதியில்
ரயில் பெட்டியின் கதவு மூடப்படும் முன்பு
குதித்து ஏறினேன்.
நகரம் கூட அழகாய் இருந்தது
ஜன்னல்களில்.
மக்கள் ஒரே விதமான நாற்றத்துடன்
ஜன்னலில் இருந்து குதித்து
தற்கொலைச் செய்து கொள்ள போகிறவர்கள் போன்ற
முகத்துடன் காத்திருந்தார்கள்
அவரவர் இறங்க வேண்டிய நிலையத்திற்காக.… …மேலும் வாசிக்க


