• எங்கள் அறையில் எங்கெங்கும்

    குவிந்தும்

                 சிதறியும் கிடக்கின்றன

    அவனது வார்த்தைகள்.

    தனக்குள்ளே பேசியும்,

                                        சி

                                       ரி

                                        த்

                                        து

                                          ம்,

                                                 கதைசொல்லியும்

    கழிகின்றன அவனுடைய நாட்கள்.

     

    களவாடி பகிர்ந்துண்ட நினைவுகள்

    கல்மழை நெஞ்சில் விழ பயந்து ஓடிய கணங்கள்

    மழை நீரோடிய மெல்லிய மணலை சுவைத்த பாதங்கள்

    களிமண்ணில் பானைகள் வடித்தும், வயலில் நாற்று நட்டும்,

    துண்டுகளில் சடை வளர்த்தும் திரிவதாக கனவுகள்

    கைகோர்த்து பூப்பறிக்கச் சொல்லும் சடங்குகள்

    ‘கத்திரிக்கா தோட்டத்தில களை பறிக்க வாரியாளா’

    எனக் கூவும் பாடல்கள்

    எதிர்நீச்சல் போடசொல்லும் கால்வாய்கள்

    இசைவோடு நீந்தச்சொல்லும் குளங்கள்

    பள்ளத்தை கண்டு மிரளாத கிணற்று குளியல்கள்

    நண்பர்களுடன் கோபித்து

    பின் வெட்கப்புன்னகையுடன் சமாதானமாகும் பொழுதுகள்

    சண்டைகள்; சச்சரவுகள்

    இன்றும் எனது துயரங்களுக்கு மருந்து

    பால்யகால நினைவுகளே!

    அவற்றை நெஞ்சில் சுமந்து திரிந்து

    வீடு திரும்புகையில்

    தொலைந்த எதையோ

                                       அட்டைப்பெட்டிகளில்

                 துழாவிக்

                            தேடிக் கொண்டிருக்கிறான்

                                                       என் மகன்.

    – இளமதி.


  • chennai traffic

    எங்களூர் நெடுஞ்சாலையில் எப்போதும் வாகனங்கள் நிறைந்திருக்கும். என்னுடைய சிறு வயதில் அந்த சாலையை கடப்பதை ஒரு கலையாக பாவித்து கற்று கொண்டேன். லாரிகளும் பஸ்களும் ஸ்கூட்டர்களும் ஓடி கொண்டிருக்கும் சாலையினை கடக்க ஒரு கணம் நிதானித்து, பிறகு சரியான சந்தர்ப்பத்தில் ஓட்டமும் நடையுமாக கைகளை முன்னால் நீட்டியபடி கடந்து விடுவேன். சாலையை கடக்க முடியாமல் நிற்கும் பெரிசுகளை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும். பள்ளிகாலம் முடிந்து கல்லூரியில் சேர்வதற்காக சென்னைக்கு வந்த போது இந்த கலை கைகொடுக்கவில்லை.

    சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஒரு சிக்னலில், பச்சை விளக்கு எரியும் போதே சாலையை கடக்க முனைந்தேன். அர்ஜுனனின் அம்புகள் போல காவேரி பெருவெள்ளம் போல வாகனங்கள் என்னை அரவணைத்தபடி போனது. சுழலில் மூழ்கி விடுவோம்; இதோ விபத்திற்குள்ளாகி இறந்து விடுவோம் என தோன்றியது. முன்னாலும் போக முடியாமல் பின்னாலும் போக முடியாமல் நான் தவிப்பதை அங்கிருந்த டிராபிக் போலீஸ்காரர் முறைத்தபடி இருந்தார். ஒருவழியாய் தடுமாறி வந்த இடத்திற்கே திரும்பி போது சென்னை என்பது வேறு நிலப்பரப்பு என உறைத்தது.… …மேலும் வாசிக்க


  • நான், மனைவி மற்றும் எங்கள் ஐந்து வயது மகன் மூவரும் மருத்துவமனைக்கு போய் விட்டு திரும்பும் போது வழியிலே ஒரு பொம்மை கடைக்கும் போனோம். பொட்டு முதல் பீரோ வரை அனைத்தையும் விற்கும் பெரிய கடை அது. அதில் ஒரு தளத்தில் குழந்தைகளுக்கான பொருட்கள் இருந்தன.

    கண்ணாடி பெட்டிகளில் கையளவு கார்கள் நூற்றுக்கணக்கில் பார்க் செய்யபட்டிருந்தன. விதவிதமான கார்களை பார்க்கும் போது அவை அனைத்தும் வெளிநாட்டு படங்களில் வரும் நவீன கார்களை போல் இருந்ததேயன்றி எதுவும் நம்மூர் ரோட்டில் ஓடும் கார்களை போலவே இல்லை. சிறிது நேரம் வேடிக்கை பார்த்தபடி இருந்த போது எனக்கே அந்த கார்களை வாங்கும் ஆசை அதிகரித்து விட்டது. எனது பையனோ தேர்ந்த மெக்கானிக் போல கார்களை ஒவ்வொன்றாய் அலசி கொண்டிருந்தான். வீட்டில் ஏற்கெனவே இது போல முப்பது நாற்பது கார்கள் இருக்கின்றன. அதனால் அவன் தான் அதில் நிபுணர்.

    கார்ஸ் என்கிற திரைப்படத்தின் இரண்டாவது பார்ட் சமீபத்தில் ரீலிசானது.… …மேலும் வாசிக்க


  • இந்தக் கணம்.
    இதை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன்.

    மென்பனியில் வரைகோடாய் நீ தெரிவதை போல
    ஆழ்மனதில் இது எங்கோ எனக்கு தெரிந்தபடியே தான் இருந்திருக்கிறது.

    என் உதிரச்சுவையை உன் வாள் அறிந்திருப்பது போல
    இதன் சுவையை உணர்ந்து தான் இருந்திருக்கிறேன் இத்தனை காலமும்.

    உன் கண்களில் மிளிரும் குரோதம் போல
    என் பயங்களின் பெருந்தொகுப்பில் இது ஒளிர்ந்து கொண்டே தான் இருந்திருக்கிறது.

    உனக்கும் எனக்கும் இடையே
    காற்றினில் கனக்கும் பெருந்துயரம் போல
    என்னுள்ளே கனத்து தான் இருந்திருக்கிறது இந்த எதிர்பார்ப்பு.

    கருத்திருக்கும் பின்புலம் வாய்க்குமென
    ஏனோ அப்போதே உண்ர்ந்தேன் நான்.

    இன்று நீ எனக்கு செய்வதை
    இதற்கு முன்
    நான் செய்திருக்கிறேன் பலருக்கு
    நூற்றுக்கணக்கான முறை.

    எனினும்
    இந்த கணத்தினை
    நான் என் கனவுகளில் பார்த்திருக்கிறேன்.


  • அதிசயம் தான்.
    சடசடவென பெய்யும் மழையில்
    உடல் எங்கும்
    உள்ளுக்குள்ளாக வியாபிக்கிறது ஈரம்.

    கைகளில் மட்டுமே நீர்.
    எப்படி சுழற்றினாலும் மாற்றமில்லை.

    கண்களை மூடும் போது
    இடி இடிக்கும் சப்தம்
    இமைகளுக்குள்ளாக.

    கரைகிறேன்.

     


  • ஆயிரம் ரூபாயிற்கு சில்லறை உடனே கிடைத்தது ஆச்சரியம் தான்.
    நெரிசல் மிகுந்த டீக்கடையோரம்
    கால்களை பார்த்தவாறு
    ஒரு மூலையில் அமர்ந்து
    பத்து ரூபாய் நோட்டுகட்டுக்களை எடுத்து
    ஒவ்வொரு நோட்டாய் கிழித்து போட தொடங்கினேன்.
    முதலில் ஒரு மடிப்பு.
    இரண்டாக
    நான்காக
    எட்டாக கிழித்தேன்.

    கால்களை பார்க்கக்கூடாது.
    வெப்பத்தை உணரக்கூடாது.
    வியர்வையை துடைக்கக்கூடாது.
    ஓலியினை உணர்தல் வேண்டாம்.

    தரையெங்கும் குப்பைக்கூளம்.
    கால்களிடையே பறக்கும் கிழிசல்கள்.

    ஊழ்த்த இறைச்சி
    நும்மிடைப் பாவம் நில்லாவே.


  • ஆறு வித்தியாசங்களை சொல்லுங்கள்!


  • எங்கோ விலகி போய் விட்டது
    என் இளமை பருவம்.
    என்னவனின் முத்தங்கள் இப்போது சுவைப்பதே இல்லை.
    இமை மூடுவதும் இல்லை.
    அவன் கண்களின் படபடப்பினை உணர்ந்த பிறகு
    ஒவ்வொரு முறையும்
    ஏமாற்றத்துடனே இதழ்களை துடைத்து கொள்கிறேன்.

    என் பழைய தருணங்கள் உயிர்த்தது போல இருக்கிறீர்கள்
    நீங்கள் இருவரும்.
    காதலின் பிரகாசம்
    உங்கள் மேலெல்லாம் இருக்கிறது.

    என்னை ஒரு முறை
    அவளை முத்தமிடுவது போல முத்தமிடுவாயா?

    ஒரு கணம் மீண்டும் பிறப்பேன்.

    நன்றி: Matrix திரைப்படம்


  • wikileaks2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட ஈழப் போரில் உலக நாடுகள் பெரும்பாலானவை இலங்கை அரசாங்கத்தை போர்நிறுத்தம் செய்யும்படி வலியுறுத்தின. ஆனால் உலக நாடுகளின் இந்த கோரிக்கையினை இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ளாதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியும் காரணம் என்கின்றன விக்கிலீக்ஸில் வெளியான ஆவணங்கள்.

    2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புவிற்கு பயணப்பட்டார். வன்னியில் போர்முனையில் நடந்த மனித உரிமை மீறல் செயல்களை பற்றிய கவலைகளை தெரிவிக்க நடந்த பயணம் என்று சொல்லபட்டாலும் இந்த பயணத்தின் போது முகர்ஜி விடுதலைப்புலிகளுக்கான எதிரான போரினை நிறுத்தும்படி கோரவில்லை என்று தெரியவந்திருக்கிறது.

    “போர் வெற்றி 23 ஆண்டுக்கால பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வருவதோடு இலங்கை முழுவதும் குறிப்பாக வட இலங்கைக்கும் புதிய அரசியல் வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் என நான் நம்பிக்கை தெரிவித்தேன். ராஜபக்சே தன்னுடைய நோக்கமும் அது தான் என்று உறுதியளித்தார்,” என்று முகர்ஜி சொன்னதாக விக்கிலீக்ஸில் வெளியான ஆவணங்கள் சொல்கின்றன.… …மேலும் வாசிக்க


  • விக்கிலீக்ஸில் சென்னை தூதரக அதிகாரியின் குறிப்புகள்wikileaks
    அமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. அரசாங்கத்தால் ஒளித்தோ அல்லது மறைத்தோ வைக்கபடும் தகவல்களை அல்லது கோப்புகளை இணையத்தில் பட்டவர்த்தனமாக போட்டு உடைப்பது தான் விக்கிலீக்ஸ் பிரபலமாக காரணம். உலகமெங்கும் பல முக்கிய தலைகள் இதில் தோலுரித்து காட்டபட்டார்கள். இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள்.

    ஓட்டிற்கு பணம் – சர்வ சாதாரணம்
    கார்த்தி சிதம்பரம், அழகிரியின் அரசியல் சகா பட்டுராஜன் ஆகியோர் தாங்கள் 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டிற்காக பொதுமக்களுக்கு பணம் கொடுத்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் ஒப்பு கொண்டதாய் சொல்கிறது விக்கிலீக்ஸ் குறிப்புகள்.

    2009 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பெட்ரிக் அமெரிக்க அரசிற்கு அனுப்பிய குறிப்புகளில் தமிழகத்தில் ஓட்டிற்காக பணம் கொடுத்து அரசாங்க கட்சிகள் எப்படி எல்லாம் ஜனநாயகத்தை வளைக்கின்றன என விரிவாக எழுதபட்டிருக்கிறது.… …மேலும் வாசிக்க