• சாதி உட்பிரிவுகளை முதலில் ஒழிக்க வேண்டும்

    சாதிகளுக்கு இடையே நிறைய ஏற்ற தாழ்வுகளும் வேறுபாடுகளும் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான சாதி உட்பிரிவுகளுக்கு இடையே ஏற்ற தாழ்வுகள் அதிகமில்லை. அதனால் முதலில் சாதி உட்பிரிவுகளை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் இது சரியான அணுகுமுறை அல்ல. வட இந்தியாவிலோ அல்லது மத்திய இந்தியாவிலோ இருக்கும் பிராமணர்களை விட தென் இந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் சமூகத்தில் தாங்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதாக சொல்லி கொள்கிறார்கள். வட இந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் அல்லாத வைசியர்களும் கையாஸ்தாஸும் தான் தென்னிந்திய பிராமணர்களின் அந்தஸ்தில் இருப்பவர்கள் என்று சொல்ல முடியும். அது போலவே தென்னிந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்கள். ஆனால் காஷ்மீரிலோ பெங்காலிலோ பிராமணர்கள் அசைவ உணவினைச் சாப்பிடுகிறார்கள். குஜராத்தியர்கள், மார்வாடிகள், பனியாக்கள், ஜெயின் மக்கள் இவர்கள் தான் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். சாதி உட்பிரிவுகளிலே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.… …மேலும் வாசிக்க


  • இன்று மதியம் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த போது ஓர் இளைஞர் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து அவசரம் அவசரமாக வெளியே வருவதைப் பார்த்தேன்.

    “பில்டிங்கே ஆடுது,” என்று அந்த இளைஞர் மொத்தமாய் தெருவைப் பார்த்து சொன்னபோது அவர் குடிபோதையில் இருக்கிறாரா என்று மனதில் தோன்றியது. ஆனால் அதே சமயம் பல கட்டிடங்களில் இருந்து பலர் வெளியே அவசர அவசரமாய் வருவதைப் பார்த்தவுடன் சின்ன அளவிலான நிலநடுக்கம் வந்திருக்கிறது என புரிந்து கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் சென்னையே பரபரப்பானது.

    இந்தோனிசியாவில் 8.9 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் இந்திய கிழக்கு கடற்கரை முழுவதும் சின்ன அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது என்றும், சுனாமி வரக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்றும் செய்திகள் வெளிவந்தன.

    மெரீனா கடற்கரைக்கு போன போது அங்கு காவல்துறையினர் கடற்கரை மணலில் இருந்தவர்களையெல்லாம் அவசர அவசரமாய் வெளியேற்றி கொண்டிருந்தனர். அலுவலகத்தில் இருந்தும் பள்ளிகளிலும் இருந்தும் மக்கள்கூட்டம் வேக வேகமாய் வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தனர்.… …மேலும் வாசிக்க


  • தன்னுள் சோகத்தினை

    உருட்டி கொண்டே இருந்தான்.

    உருண்டு திரண்டு கடினமாகி

    பந்தாய் வடிவமெடுத்து நின்றது அது.

     

    ஆளற்ற மலைப்பிரதேசங்களில்

    அலைந்து

    சதை இறுகி

    எலும்புகள் துருத்தி

    கல்லும் மண்ணுமாய் மாறி போனான்.

     

    தன்னில் இருந்து விலகி பார்க்க முயன்றான்.

    சருகும் கல்லும் தூசியும் வானமும் நான் தான் என

    இயைந்து வாழ விழைந்தான்.

     

    பெருமழையையும் சூறாவளியையும் கொண்டு வந்தது

    அவனது சோகம்.

    விலக விலக அவனிடம் இருந்து கொண்டே இருந்தது அது.

    தன்னுள் நுழைந்து தேடும் போது

    தேடுபவனாய் மாறி போயிற்று.

     

    மழை ஓய்ந்த தினமொன்றில்

    ஓடையில் கால்கள் கிடக்க

    வானத்தில் பேசும் நட்சத்திரங்களை

    இமை கொட்டாமல் பார்த்தபடி

    அவனது உயிர் பிரியும் வரை

    வழி எதுவும் கிடைத்திருக்கவில்லை.


  • அந்த விபத்து நடந்து இப்போது ஒரு நாளிற்கு மேலாகி விட்டது. இன்னும் ஒரு உடலைக் கூட கண்டு பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். 135 மனிதர்களைக் காணவில்லை. 124 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பதினொரு பேர். இடம் உலகத்திலே உயரமான போர்க்களம், சியாச்சின் பனிப்பிரதேசம். இந்திய பாகிஸ்தான் எல்லையில் எப்போதும் பதட்டம் நிறைந்த சியாச்சின் மனித உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமே அல்ல. இரு நாடுகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் எப்போதும் இருபுறமும் அங்கு பணியில் அமர்த்தப்படுகிறார்கள். 6700 மீட்டர் உயரமுள்ள சியாச்சினில் உறைய வைக்கும் கடுமையான குளிர், உயரத்தில் இருப்பதினால் ஏற்படும் உடல் மற்றும் மனம் ரீதியான அலர்ஜி, அதைத் தொடர்ந்து உருவாகும் நோய்கள், வேகமான காற்று, தனிமை என இங்குப் பணியில் இருக்கும் இரு நாட்டு வீரர்களும் நிறையவே இன்னல்களுக்கு ஆளாக வேண்டியது இருக்கிறது. பனி பிரதேச தனிமை தற்கொலை எண்ணங்களை உருவாக்க வல்லது. இத்தனை இன்னல்களைத் தாண்டி பனிப்புயல் மற்றொரு ஆபத்து.… …மேலும் வாசிக்க


  • இந்த ரோடு தானா? இந்தக் குறுக்கு சந்தில் தான் அவளது அலுவலகம் இருக்கிறதா? நான் காரினைத் திருப்பலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்த போது, அவள் சாலையில் நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவளைப் பார்த்ததும் உற்சாகமாகி வெளியே எட்டி பார்த்து கையசைத்தேன். அவள் முதலில் கவனிக்கவில்லை. பிறகு தலையை லேசாக ஆட்டி புன்னகைத்தாள். அந்தப் புன்னகை அப்படியே இருக்கிறது. இடையில் பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டதெனினும் அவளை நேற்று தான் பார்த்தது போல் இருக்கிறது.

    மாறாத அதிகாரமிடுக்குடன் அவளது அலுவலக வாயில் வரை நடந்து போய் கார் எங்கே நிறுத்த வேண்டும் என்று சைகை காட்டினாள். நான் காரினை நிறுத்தி விட்டு வெளியே வரும்வரை கண்களால் என்னை எடை போட்டு கொண்டிருந்தாள்.

    “என்ன எப்படி இருக்க?” என்றேன். அந்த ‘என்ன’ வழக்கமாய் ‘டி’யில் முடியும். பத்து வருடங்கள் கழித்து இப்போது அப்படி அழைக்க தயங்கி மென்று முழுங்கினேன்.

    கண்கள் உற்று பார்த்து இருக்க, புன்முறுவலுடன், “வாடா, உள்ள வாடா,” என்று சொல்லி விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.… …மேலும் வாசிக்க


  • “காலம் மாறிடுச்சு, இப்ப சாதியெல்லாம் யார் சார் பாக்குறாங்க?” மத்திய வர்க்கத்தினர் உரையாடல்களில் தவறாமல் யாராவது ஒருவர் இப்படி சொல்வதுண்டு. நகரங்ளிலும் தொடர்ந்து தலைவிரித்தாடும் சாதி வெறி, கிராமத்தில் இன்னும் தொடரும் அடக்குமுறை அவலம் என சாதி மனோநிலை இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை சமூக ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் சுட்டி காட்டினாலும் அது பெரிதாக விவாதங்களுக்கு வந்து சேர்வதில்லை.

    “இப்போ அங்காங்கே நடக்கிறதை வைச்சு சாதி வெறி சாதி வெறின்னு சொல்லாதீங்க சார். இண்டர்நெட், செல்போன் காலத்துல அடுத்த தலைமுறையில சாதி உணர்வெல்லாம் சுத்தமா இருக்காது சார்.” இதுவும் அந்த உரையாடலின் போது சொல்லப்படுவது தான். அடுத்த தலைமுறையில் சாதி உணர்வு குறைந்து இருக்குமா? இந்தக் கேள்விக்குப் பதிலைத் தேடும் போது நிறைய அதிர்ச்சி தகவல்கள் தான் கிடைக்கின்றன.

    தலித் மாணவர்களைத் தாக்கும் சக மாணவர்கள்

    இந்த மாதம் மட்டும் தலித் மாணவர்கள் சக பள்ளிக்கூடத்து மாணவர்களாலே தாக்கப்படும் சம்பவங்கள் மூன்று நடந்துள்ளன. மதுரை அருகே உசிலம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.… …மேலும் வாசிக்க


  • குறிப்பு: பதிவில் நிர்வாண பெண்ணுடல் புகைப்படங்கள்/ஓவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

    அவர் ஒரு புகைப்பட கலைஞர். பாரீஸ் நகரத்தில் அந்தப் பெண்ணைச் சந்தித்தார். அந்தப் பெண் புகழ் பெற்ற ஓவியர்களுக்கு நிர்வாணமாக காட்சி கொடுத்து புகழ் பெற்றவர். பல புகழ்ப் பெற்ற ஓவியங்களில் அந்தப் பெண்ணைக் காண முடியும்.

    “உங்களைப் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன்,” என்றார் அவர்.

    “புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அது வெறும் யதார்த்தத்தினைச் சித்தரிக்கிறது. ஓவியங்கள் அப்படியில்லை,” என்று பதில் சொன்னார் அந்தப் பெண்.

    “என்னுடைய புகைப்படங்கள் அப்படி இல்லை. ஓர் ஓவியர் எப்படி ஒரு காட்சியைத் தன் கலாபூர்வ நோக்கங்களுக்காக மாற்றுகிறாரோ அப்படி என்னுடைய புகைப்படங்களை நான் ஓவியம் போல தான் எடுக்கிறேன்,” என்றார் அவர்.

    இந்த உரையாடல் இன்று மீ-யதார்த்தம் (சர்ரியலிசம்) பற்றிய விவாதங்களில் முக்கியமானது. காரணம் அந்தப் புகைப்பட கலைஞர் தான் சொன்னதைப் பிறகு செய்தும் காட்டினார். அவர் அந்தப் பெண்ணை வைத்து எடுத்த புகைப்படம் ‘Violon d’Ingres.’… …மேலும் வாசிக்க


  • அமெரிக்க பொருட்களை வாங்காதீர்கள் என கோஷமிட்டப்படி செல்கிறார்கள் புத்த துறவிகள். எதுவெல்லாம் அமெரிக்க பொருட்கள் என்று பட்டியலிடுகிற நோட்டீஸை மக்களுக்கு வினியோகிக்கிறார்கள். இன்று செய்திதாள்களில் அந்தப் புத்த துறவிகளின் ஆர்ப்பாட்டத்தினைப் புகைப்படங்களாய் பார்க்கும் போது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அகிம்சையைப் போதிக்கிற புத்த மதத்தில் போர் குற்றம் செய்த அரசினை ஆதரிக்கிற புத்த துறவிகள் எப்படி உருவானார்கள்?

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான சபையில் இலங்கையினைப் போர் குற்றவாளியாக அமெரிக்கா சித்தரித்து விட்டது என்கிற கோபத்தில் புத்த துறவிகள் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டத்தினை நடத்துகிறார்கள் என்கின்றன செய்திகள். இல்லையில்லை, இந்தப் புகைப்படமே இலங்கை அரசின் யுக்தி தான் என்கிறார்கள் சிலர். அமெரிக்க வர்த்தகத்தின் மீது கண்ணிற்கு தெரியாத தாக்குதல் நடத்தினால் அமெரிக்க அரசு பணிந்து போகும் என்பதால் நடத்தப்படும் நாடகம் இது எனவும் சொல்கிறார்கள்.

    இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான துவேஷத்தை நூறு ஆண்டு காலமாய் வளர்த்ததில் புத்த துறவிகளுக்கு கணிசமான பங்குண்டு என்கிறார்கள் இலங்கை வரலாற்றை அறிந்தவர்கள்.… …மேலும் வாசிக்க


  • கூடங்குளத்தில் எதிர்பார்த்தது போலவே அரசு தன் முழு வலிமையையும் காட்டி அணுமின் உலைக்குத் திறப்பு விழா நடத்தி விட்டது. அணுமின் உலைகளைக் கட்டும் போது முதலில் சொல்லப்படும் விஷயமே அங்குள்ள மக்கள் அதற்கு அனுமதி தந்து விட்டார்கள் என்பது தான். ஆனால் 144 தடையுத்தரவைப் போட்டு நடந்திருக்கும் இந்த திறப்பு விழா விதிமுறைகளை மீறிய செயல். குவிந்திருக்கும் போலீசார், வாகனங்களுக்கு/மக்களுக்கு அனுமதி மறுத்தல் போன்றவை மனித உரிமை மீறல் மட்டுமல்ல சட்ட புறம்பானதும் கூட.

    இடைதேர்தல் வரை காத்திருந்து இந்தச் செயலைச் செய்திருக்கும் அரசு கூடவே கோடி ரூபாய் செலவில் அங்குள்ள மக்களுக்கு நலபணி திட்டம் அறிவித்து எலும்பு துண்டினை எறிந்து இருக்கிறது. மக்களைப் பற்றி அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கும், அவர்களுக்கு ஆலோசனை சொல்பவர்களுக்கும் மக்கள் எலும்பு துண்டுகளைக் கவ்வி கொண்டு நிற்கும் நாய்கள் போல தெரிவார்கள் போல.

    மாற்று கருத்தினை எதிர்கொள்ள துளியும் இஷ்டமின்றி, அடக்குமுறைகளை ஏவி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர துடிக்கும் அதிகாரம் கண்டனத்திற்குரியது.


  • அவனை எனக்கு முதலில் அடையாளமே தெரியவில்லை. தாடியும் சிவந்த கண்களும் அழுக்கேறிய வெள்ளைச் சட்டையும் அவனை வேறு யார் போலவோ எனக்குக் காட்டியது. அவன் ஜியாவுதீன். அவனிடம் நெருங்கி பழகியதில்லை என்றாலும் முந்தைய மூன்று சந்திப்புகளுமே போதும் அவனை நான் மறக்காமல் இருக்க. அப்படி ஒரு வித்தியாசமான குணாதிசயமுடையவனாக இருந்தான். சில வருடங்களுக்கு முன்பு ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தான் அவனைச் சந்தித்தேன். என் நண்பன் ஒருவன் அவனைப் பற்றி மிக உயர்வாக சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தான்.

    சிவந்த நிறம். போலீஸ் போல கிராப். துறுதுறுவென சுறுசுறுப்பு. சத்தமாய் பேசும் பாங்கு. அவன் அப்போது ஓர் இளம் கம்யூனிஸ்ட். பொதுவான அந்தச் சந்திப்பிற்கு பிறகு சில நாட்களிலே ஒரு புத்தக அறிமுக விழா கூட்டத்தில் மீண்டும் சந்தித்தோம். சில சம்பிரதாய் பேச்சுகளுக்குப் பிறகு அவனுடைய குடும்பம் பற்றி பேச்சு மாறியது.

    “எங்க வீட்ல இப்போ என்னை நாத்திகன்னு திட்டுறாங்க. ஒரு முஸ்லீம் பையன் இப்படிக் கெட்டு போகலாமா அப்படின்னு கவலைப்படறாங்க.”… …மேலும் வாசிக்க