வலியே வலியை மறக்க வைக்குமளவு
வலியே
வலியை மறக்க வைக்குமளவு
அடிபட்டு
உள்ளெல்லாம் சிதைந்து
நாளெல்லாம்
மரணத்தை வேண்டி நிற்கும்
சமயத்தில் கூட
நம்பிக்கை
எங்கோ
சிறு துகளாக
இருந்தபடியே தான் இருக்கிறது.
வலியே
வலியை மறக்க வைக்குமளவு
அடிபட்டு
உள்ளெல்லாம் சிதைந்து
நாளெல்லாம்
மரணத்தை வேண்டி நிற்கும்
சமயத்தில் கூட
நம்பிக்கை
எங்கோ
சிறு துகளாக
இருந்தபடியே தான் இருக்கிறது.
இந்தக் கவிதையை நீங்க வாசிக்கச் சொன்னப்ப எனக்குத் தோணின வரிகள் இவை
கை முறிந்த வலிதான்
விரல் முறிந்த வலிக்கு
நிவாரணி
🙂 🙂 🙂
சிறு துளி நம்பிக்கையால் மலையளவு வலியும் ,துயரமும் தள்ளி நிற்கின்றன