வலியே வலியை மறக்க வைக்குமளவு

வலியே
வலியை மறக்க வைக்குமளவு
அடிபட்டு
உள்ளெல்லாம் சிதைந்து
நாளெல்லாம்
மரணத்தை வேண்டி நிற்கும்
சமயத்தில் கூட
நம்பிக்கை
எங்கோ
சிறு துகளாக
இருந்தபடியே தான் இருக்கிறது.