Year: 2010

  • இருண்ட குகை.
    மலையே சர்ப்பமாய் எங்களை சுற்றி நிற்கிறது.

    கருமேகங்கள்.
    இதோ உருளைகள் மீண்டும் உட்செல்கின்றன.
    இது வரை இந்த சங்கிலி பிணைப்புகள் ஓய்ந்து பார்த்ததில்லை.

    வயிற்றில் அமிலம்.
    கண்களில் எரிநீர்.
    வெறும் உமிழ்நீர் தாகத்தை போக்குமா?
    செவித்திறன் இன்னும் இருக்கிறதா?
    நீண்ட அமைதியும் நீண்ட சத்தமும் ஏறத்தாழ ஓன்று தான்.

    இன்றைய பொழுதின் முதல் பெட்டி வெளி வர வேண்டும்.
    நேரம் கடந்து விட்டது.
    காத்திருத்தலின் வலியும் தவிப்பும் பயமும் வெறுமையும்
    நாங்கள் யார் என்பதை மறக்க செய்கிறது.

    நாங்களும் இயங்கி கொண்டிருக்கிறோம்
    அதனோடு.


  • இதற்கு முன் பதித்த தமிழ் வலைப்பதிவுலகம் என்கிற இடுகையின் தொடர்ச்சியாக இதனை வாசிக்கவும். 🙂

    தமிழ் வலைப்பதிவுலகம் என்கிற என் இடுகையை படித்து நிறைய பேர் என்னை இமெயிலிலும் போனிலும் நேரிலும் தொடர்பு கொண்டு நீங்கள் எப்படி வலைப்பதிவுகளின் தரத்தினை உயர்த்தி பேசுனீர்கள் என்று தங்கள் ஆச்சரியத்தினை தெரிவித்தார்கள். (இப்படியாக பொய் சொல்ல விரும்பவில்லை.) உண்மையில் அதற்கு கருத்து சொன்ன ஒரே ஆள் நமது ரவிசங்கர் தாம்.

     

    தமிழ் வலைப்பதிவுகளின் தரம் பற்றி இங்கு நான் பேச வரவில்லை. தரம் என்று ஒன்று உண்டு என்றும் அது உலகம் முழுக்க ஒரே அளவுகோளினை கொண்டது என்றும் நான் நம்புவதை விட்டு பல காலமாகிறது. ஆனால் நான் சொல்ல வருவது வலைப்பதிவுகள் ஏற்படுத்தும் புது வகையான வாசிப்பனுபவம் பற்றியது. இது எதன் காரணமாய் ஏற்படுகிறது என யோசித்தால் வலைப்பதிவுகளில் உள்ள ‘நான்‘ தான் இதன் காரணியாக இருக்கும் என நினைக்கிறேன்.… …மேலும் வாசிக்க


  • கூகுள் ரீடரில் தமிழ் வலைப்பதிவுகளை ஒட்டுமொத்தமாய் வாசிக்கும் அனுபவம் என்னுடைய நீண்ட கால வாசிப்பனுபவத்தை குடிக்காரன் மனநிலைக்குதள்ளி விட்டது என்று சொல்லலாம். பதினொரு வருடங்களுக்கு முன்பு ஆறாம்திணை இணைய இதழில் பணிபுரிந்த காலம் தொடங்கி இன்று வரை தமிழ் எழுத்துகள் இணையத்தில் வலம் வருவதை பார்த்து வந்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழில் வலைப்பதிவுகள் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்து இருக்கின்றன என்று தோன்றுகிறது. சிலர் ஆரம்பித்த ஜோரில் தங்கள் வலைப்பதிவினை கை கழுவி போனாலும் நிறைய பேர் தங்களது வலைப்பதிவை சீரியஸான விஷயமாக எடுத்து கொண்டு அவ்வபோதாவது எழுத தான் செய்கிறார்கள்.

    எழுதுவது என்றால் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என்று இதை வகைப்படுத்தி விட முடிவதில்லை. குமுதம், ஆனந்த விகடன் மற்றும் அதன் பிரதி பத்திரிக்கைகள் எல்லாவற்றிலும் இருக்கும் சரக்கினை விட இன்றைய தமிழ்கூறு வலைப்பதிவுலகம் ஆபாரமான சரக்குகளை பதித்தபடி அதுவும் ரியல் டைமில் பதித்தபடி இருக்கிறது. என்ன வேண்டும் சொல்லுங்கள், சினிமா விமர்சனங்களா?… …மேலும் வாசிக்க


  • அவன் கைதான மறுநாள்.
    சூரியன்.
    நெற்றியில் வியர்வை.
    பாதையில் செருப்பற்ற கால்களை துன்புறுத்தும் முட்கள்.
    நாவினில் தாகம்.
    நிழல் கூட சுருங்கி கொண்டு விட்டது.
    சந்தையின் மணம் மட்டுமே மிச்சமிருக்கும் வெற்றுவெளியில் நடந்து கொண்டிருக்கிறேன்.
    தூரத்தில் ஒற்றை குடிசைக்கு வெளியே கொலையானவனின் சகாக்கள் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
    பாலை நிலத்தில் ஒற்றை ஆளாய் என்னை தூரத்திலே பார்த்திருக்கக்கூடும்.
    ஆட்டத்தை நிறுத்தி விட்டு சேர்ந்து நிற்கிறார்கள்.
    என்னால் மரணத்தை காற்றில் உணர முடிகிறது.
    எல்லா திசைகளிலும் அவர்களது பார்வை அலைபாய்கிறது.
    என் கையில் இருந்து ஊற்றிய உதிரத்தை வேட்டியில் துடைத்து விட்டு ஓடுகிறேன்
    கொடூரமாய் ஓலமிட்டபடி அவர்களை நோக்கி.


  • எங்களுக்கு கல்வி வேண்டாம்.
    எங்கள் எண்ணங்களை நீங்கள் கட்டுபடுத்த வேண்டாம்.
    பள்ளிக்கூடத்தில் வார்த்தைகளில் விஷம் ஊற்ற வேண்டாம்.
    குழந்தைகளை தனியாக விடுங்கள்.
    ஆசிரியர்களே குழந்தைகளை தனியாக விடுங்கள்.
    எல்லாமே சரியாக தான் இருக்கிறது.
    சுவரில் அது மற்றொரு செங்கல்லாக தான் இருக்கிறது.
    நீங்களும் அங்கே இன்னொரு செங்கல் தான்.

    – பிங்க் ஃபிளாயிட், ராக் இசை கலைஞர்

    கட்டாய கல்வி என்று ஒன்று கிடையாது. கல்வி எங்கள் அடிப்படை உரிமை என்கிற வாசகமே சரியாக இருக்கும். கல்வியுரிமை (right to education) ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று அமுலுக்கு வந்ததாக சொல்லி இருக்கிறார்கள். வழக்கம் போல பாராட்டு வாசகங்கள், சிற்சில விமர்சனங்கள். ஆனால் அதிகார பாதைக்கு இது ஒரு மைல் கல். தங்களுடைய பெருமையாக பறைசாற்றி கொள்ள ஒரு சாதனை.

    ஆறு வயதில் தொடங்கி 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கல்வி அளிக்கபட வேண்டும். தற்போது 22 கோடி குழந்தைகள் இந்த வயதில் இருக்கிறார்கள்.…மேலும் வாசிக்க


  • எப்படி துரத்தினாலும் அடுத்த நாள் காலை
    மீண்டும் கூரையில் தோன்றும் குரங்குகளை போல
    கறை படிந்து தான் போகிறது
    எனது சட்டையில்.

    நண்பன் இறந்து போன நாளில்
    அவனுடைய சடலத்தை தூக்க தயங்கிய கணத்தில்
    கறையின் நிறம் மாறி போனது.


  • இந்த வாரம் உயிர்மை குழுமத்தின் இணைய இதழான உயிரோசையில் என்னுடைய ‘பிச்சையும் வேண்டாம்! தானமும் வேண்டாம்!’ என்கிற கட்டுரை வெளிவந்து இருக்கிறது. ஊடகங்களில் பணிபுரிய தொடங்கி ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு மேலாகியும், எனது கட்டுரை வேறொரு ஊடகத்தில் பதிக்கபட்டிருப்பதை பார்க்கும் போது இன்றைக்கும் என் மனம் சந்தோஷத்தில் பொங்குவதை என்ன என்று சொல்ல! கட்டுரையை மீண்டும் படித்த போது அதன் நீட்சியாக சில எண்ணங்கள் தோன்றின. அதை பதிவு செய்ய தான் இந்த தொடர்ச்சி.

    இந்திய அரசாங்கத்தின் பதினொன்றாவது திட்ட அறிக்கை ஒரு முக்கியமான இலக்கினை வரைந்திருக்கிறது. நாட்டின் அடித்தட்டு மக்களுக்கும், விளிம்புநிலை மனிதர்களுக்கும் வளர்ச்சியின் பங்கு சரியான அளவு கொண்டு சேர்க்கபட வேண்டும் என்பது தான் அந்த இலக்கு. கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இது சாதாரண காரியமாக இருக்க போவதில்லை. பெரும்பாலும் பேப்பர் திட்டங்களாக மலர்ந்து விடுமோ என்பது தான் இப்போதைய அச்சம்.

    வளர்ச்சியின் பங்கினை கொடுப்பது என்பது எப்படி? இயேசு கிருஸ்து உன்னிடம் இரண்டு ரொட்டி இருந்தால் ஒன்றினை இல்லாதவனிடம் கொடு என்றார்.… …மேலும் வாசிக்க


  • அடிமைகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் சுகம்.
    வேலைகளை ஏவலாம்.
    கோபத்தைக் கொட்டலாம்.
    அடிக்க கூட செய்யலாம்.
    வல்லுறவு கொள்ளலாம்.
    நம் காலில் விழுந்து அவர்களை அழ வைக்கலாம்.

    “மன்னித்து விட்டேன் இந்த முறை பிழைத்து கொள்,” என்று மட்டும் சொல்லாதீர்கள்.
    அதற்குப் பதில் அவர்களை கொன்று விடலாம்.


  • மோகம் வென்று
    கழுத்தை அறுத்து இரத்தம் குடித்து
    உதிரப் படுக்கையில் தூங்கும் போது
    வருவதெல்லாம் துர்கனவுகள்.
    இரத்தம் பீறிடும் போது எப்படி வலிக்கும்?
    என்னுள் குத்திய ஊசிகளின் எண்ணிக்கை
    அதிகரித்து கொண்டே இருக்கின்றன.
    இத்தனை வலியையும் கொடையளிக்க
    தினம் தினம் திரிகிறேன்
    சிலுவையை சுமந்தபடி.


  • சற்று முன்பு எனது வார்த்தைகளை திருடிச் சென்றவன்

    இதோ இந்த நகரின் ஏதோ ஓர் இருள்சந்தினுள்

    அதனை திறந்து பார்ப்பான்.

     

    எதை எடுத்து கொள்வான், எதை எறிந்து செல்வான் என தெரியவில்லை.

    திருடியவன் தன் வழியில் எங்காவது எதாவது கொட்டி இருக்கிறானா என

    என் பாட்டி பாதை எங்கும் தேட போய் விட்டாள்.

    மௌனத்தை வாயில் மென்றவாறு சலித்து கொள்கிறேன் நான்.