கறை படிந்த சட்டை

எப்படி துரத்தினாலும் அடுத்த நாள் காலை
மீண்டும் கூரையில் தோன்றும் குரங்குகளை போல
கறை படிந்து தான் போகிறது
எனது சட்டையில்.

நண்பன் இறந்து போன நாளில்
அவனுடைய சடலத்தை தூக்க தயங்கிய கணத்தில்
கறையின் நிறம் மாறி போனது.


Comments
7 responses to “கறை படிந்த சட்டை”
  1. ஜெகநாதன் Avatar
    ஜெகநாதன்

    கறையின் வடு தாங்கிய கவிதை!
    அழிக்க முடியாததாக இருக்கிறது.. இரண்டும்!
    வாழ்த்துக்கள்!

  2. சந்தனமுல்லை Avatar
    சந்தனமுல்லை

    🙁

  3. Sai Ram Avatar

    ஜெகநாதன் மற்றும் சந்தனமுல்லை உங்களுடைய வருகைக்கு நன்றி! கவிதைக்கு பெரும்பாலும் ஏன் கமெண்ட்கள் குறைவாக இருக்கிறது 🙁

  4. ஜெகநாதன் Avatar
    ஜெகநாதன்

    சாய்,
    வருத்தப்பட அவசியமேயில்லை. பின்னூட்டங்களைப் பார்த்து ப​டைப்பின் தரத்தை, உழைப்​பை, தாக்கத்​தை கண்டு ​கொள்ள முடியாது.
    கவிதை நன்றாக இருக்கிறது.

  5. Sai Ram Avatar

    உங்கள் ஆதரவிற்கு நன்றி ஜெகநாதன்!

  6. ரொம்ப நல்லாருக்கு சாய்ராம்.

  7. வாங்க ராஜாராம், என்னுடைய புது முகவரிக்கு வருகை தந்தமைக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.