Year: 2010

  • குருதி மழை

    இருளின் ஊடாக குருதி மழையில் நனைந்து கிடக்கிறோம் நாங்கள் இருவரும். அவள் இதழோரம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது அவளால் கொல்லபட்டவனின் இரத்தம்.

  • காகிதத்தை மை தொடும் கணம்

    சருகுகள் கூட விட்டு போன நிலப்பரப்பில் பட்டு போன மரம் போல அதன் காய்ந்த பட்டை போல அவன் கிடக்கிறான். கேள்விகுறி போல கிடக்கிறது அவன் உடல். முதுமையும் காயங்களும் உடலெங்கும்.

  • சுயத்தை மறத்தல்

    நான்கைந்து நாட்களாக ஒரே உடை. கலைந்த தலைமுடி. தாடி. இமைக்காதது போல அலைபாயும் கண்கள். சிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல்.

  • மனிதர்கள் – ஆம்பிள்ளைங்களை நம்பவே கூடாது

    மனிதர்கள் – ஆம்பிள்ளைங்களை நம்பவே கூடாது

    எங்கள் தெருவிற்குள் நுழைவதற்கு அந்த மதுக்கடையை தாண்டி தான் வந்தாக வேண்டும். அந்த அக்கா ஜீன்ஸ் பேண்டும் கையில்லாத சட்டையும் போட்டு கொண்டு நாலைந்து தடவை மார்க்கெட்டிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருப்பாள்.

  • இருளினை தின்னும் வெளிச்சம்

    வானத்தை போர்த்தி இருக்கிறது இருள். நகரத்தின் மீது கவிந்திருக்கிறது விளக்கு வெளிச்சம். பிரதான சாலை, குறுக்கு சந்து எங்கும் வாகனங்கள். முழுச் சுற்று போகாத சக்கரங்கள்.

  • பிளஸ் டூ தேர்வு என்னும் சித்ரவதை

    இன்று ஒரு பள்ளியின் முதல்வர் முதலிடம் பெற்ற ஒரு மாணவன் மற்றும் மாணவி இருவரையும் தன் இருபக்கமும் நிறுத்தி கை கோர்த்து கைகளை உயர்த்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருந்தார். குத்துச் சண்டை நடுவர், போட்டியின் இறுதியில் வெற்றியாளரை கையை உயர்த்தி அறிவிப்பாரே அப்படி இருந்தது அந்த போஸ்.

  • வலைப்பதிவு தொடங்கிய நாளன்றே ஹேக்கிங். மீண்டது எப்படி!

    இந்த வலைப்பதிவினை தொடங்கி 12 மணி நேரத்தில் ஹேக்கிங் (hacking) நடந்தது. இப்போது முழுமையாய் துடைத்து எறிந்து விட்டு புதிய மென்பொருளில் மீண்டும் தொடங்கி இருக்கிறேன். எல்லாம் சரியாகி விட்டது. ஏறத்தாழ பதினொரு வருடங்களுக்கு முன் பிரவுசிங் சென்டர்கள் முதன்முதலாய் சென்னையில் முளைக்க தொடங்கிய நேரம். இணையத்தின் மீது ஒருவித பித்து போல பிரவுசிங் சென்டர்களுக்கு போய் கொண்டிருப்பேன். யாகூ தான் அப்போது பிரபலமான தளம். மின்னஞ்சல், குரூப், சாட் என பிரவுசிங் என்பது யாகூவில் தான்…

  • இது புதிய வலைப்பதிவு

    ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் பிளாக்கரில் செவ்வாய்க்கிழமை கவிதைகள் என்கிற பெயரில் ஒரு வலைப்பதிவு நடத்தி கொண்டிருந்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத நினைவு அது. இப்போது எனக்கென்று இணையத்தில் சொந்த வீடு கட்டி இங்கு குடி புகுந்திருக்கிறேன். என்னுடைய பழைய பிளாக்கர் பதிவுகள் அனைத்தும் இப்போது இங்கேயே வாசிக்க கிடைக்கும்.

  • பழிக்கு பழி!

    என்னை தாக்குவது அவனது ஒரே நோக்கமாக இருக்கிறது. நாளுக்கு நாள் அது அதிகரித்தபடியே இருக்கிறது. அவனது கண்கள் நெருப்பினை உமிழ்வதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள். உடல்தசைகள் அசுர முறுக்கில் இருப்பதாக பேச்சு.

  • ஐபிஎல் – ஆல் அவுட்!

    சசிதரூர் கொச்சி அணியின் மூலமாக தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஆதாயம் தேடி கொண்டாரா? லலித் மோடி தன்னுடைய மருமகனுக்கு சாதகமாக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தாரா? ஐபிஎல்லில் கலந்து கொள்ளும் சில அணிகள் பொய்யாக நஷ்ட கணக்கு காட்டினார்களா? ஊடகங்களில் ஐபிஎல் பற்றி புது புது தகவல்கள் சூடாக வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. வர்த்தம் விளையாட்டு துறைக்குள் நுழைந்தவுடன் அதன் பின்னே அழையா விருந்தாளிகளாக நுழைந்து விட்டன ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும்.