நான்கைந்து நாட்களாக ஒரே உடை.
கலைந்த தலைமுடி.
தாடி.
இமைக்காதது போல அலைபாயும் கண்கள்.
சிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல்.
குப்பையில் எறிவதற்கு முன்
கவனமாய் காகிதங்களை
மடித்து மடித்து வைக்கிறான்
தினந்தோறும்.
சாப்பாடு பார்சலாய் வந்த தினசரிகள்,
பழைய பில்கள்,
என்றோ உதிர்ந்து போன பத்திரிக்கைத் தாள்கள்,
மற்றும்
அவனுடைய கிறுக்கல் பக்கங்கள்.
காகிதங்களில் இருந்து உதிர்கின்றன
ஒவ்வொரு எழுத்தாய்.
Leave a Reply to chandra Cancel reply