எங்களுக்கு கல்வி வேண்டாம்

எங்களுக்கு கல்வி வேண்டாம்.
எங்கள் எண்ணங்களை நீங்கள் கட்டுபடுத்த வேண்டாம்.
பள்ளிக்கூடத்தில் வார்த்தைகளில் விஷம் ஊற்ற வேண்டாம்.
குழந்தைகளை தனியாக விடுங்கள்.
ஆசிரியர்களே குழந்தைகளை தனியாக விடுங்கள்.
எல்லாமே சரியாக தான் இருக்கிறது.
சுவரில் அது மற்றொரு செங்கல்லாக தான் இருக்கிறது.
நீங்களும் அங்கே இன்னொரு செங்கல் தான்.

– பிங்க் ஃபிளாயிட், ராக் இசை கலைஞர்

கட்டாய கல்வி என்று ஒன்று கிடையாது. கல்வி எங்கள் அடிப்படை உரிமை என்கிற வாசகமே சரியாக இருக்கும். கல்வியுரிமை (right to education) ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று அமுலுக்கு வந்ததாக சொல்லி இருக்கிறார்கள். வழக்கம் போல பாராட்டு வாசகங்கள், சிற்சில விமர்சனங்கள். ஆனால் அதிகார பாதைக்கு இது ஒரு மைல் கல். தங்களுடைய பெருமையாக பறைசாற்றி கொள்ள ஒரு சாதனை.

ஆறு வயதில் தொடங்கி 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கல்வி அளிக்கபட வேண்டும். தற்போது 22 கோடி குழந்தைகள் இந்த வயதில் இருக்கிறார்கள். இதில் 1.1 கோடி பேர் பள்ளிக்கூடத்திற்கு வந்ததே இல்லை. இன்று உலகத்திலே அதிக படிப்பறிவில்லாதவர்கள் வசிக்கும் தேசம் இந்தியா தான். உலகளவில் படிப்பறிவு உள்ளவர்கள் விகிதம் 84 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவிலோ இது 66 சதவீதமாக இருக்கிறது. இந்த பின்புலத்தில் அரசாங்கத்தால் அறிவிக்கபட்டிருக்கும் இந்த புது ‘உரிமை’ எத்தனை தூரம் மாற்றத்தினை கொண்டு வரும்? எந்த திசையில் இனி நாம் பயணப்பட வேண்டும்?

இந்திய அரசாங்கம் மகத்துவமான வளர்ச்சி பாதையில் தான் பயணிப்பதாக ஒரு மாய பிம்பத்தினை நடுத்தர வர்க்கத்தினரிடையே ஏற்படுத்த முனைந்தபடி இருக்கிறது. பிரச்சனைகளை ஒப்பு கொள்ளாமல் அதற்கான தீர்வு நோக்கிய பயணம் தொடங்காது. உலகிலே அதிக படிப்பறிவில்லாதவர் வாழும் இந்த தேசத்தில் ‘படிப்பறிவுள்ளவர்கள்’ என்று யாரை இவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த கேள்விக்கான பதில் சற்று கடினமானது.

யுனெஸ்கோ நிறுவனம் படிப்பறிவு (literacy) என்பது பதிப்பிக்கபட்ட மொழியொன்றின் பல்வேறு பிரதிகளை இனம் காணுதலும், புரிந்து கொள்ளுதலும், அதை எழுத தெரிதலும் என வரையறுக்கிறது. இதை இன்னும் நீட்டி யுனெஸ்கோ, இந்த படிப்பறிவானது அந்தந்த மனிதர்களின் அறிவனை வளர்த்து கொள்ள உதவுவதாகவும், அதன் மூலம் அவர்கள் தங்களது வளர்ச்சிக்கும், தங்களது சமூக மற்றும் மனித இன வளர்ச்சிக்கு பங்களிக்க உதவுவதாகவும் இருக்க வேண்டுமென பொருள் காண்கிறது. இந்திய சென்சஸ் பொருளுரையில் இந்த வரையறை சுருங்கி படிப்பறிவு என்பது ஏழு வயதோ அதற்கு மேலோ ஆனவர்கள் எழுதவும் படிக்கவும் தெரிதல் என்பதாக இருக்கிறது. கையெழுத்து போட தெரிதல் என்கிற அளவிற்கு இது சுருங்கி விடுகிறது.

படிப்பறிவு என்பது என்ன என்று சென்சஸ் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும், யதார்த்தத்தில் இன்று சமூகத்தில் நாம் பார்ப்பது என்ன? கல்வி என்பது வணிகமயமாகி விட்டது. காரணம் அது வேலை வாய்ப்பிற்கான தகுதி. கல்வி என்பது வேலை வாய்ப்பு தகுதி என்பதாக சுருங்கி விட்டது. ஏன் நாம் நமது கல்வி அமைச்சகத்தில் தொடங்கி கிராமத்து பள்ளிக்கூடம் வரை கல்வி என்கிற வார்த்தை எங்கெல்லாம் பயன்படுகிறதோ அங்கெல்லாம் கல்விக்கு பதிலாக ‘வேலை வாய்ப்பு தகுதி’ என்கிற ப


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.