Tag: கல்வி

  • “காலம் மாறிடுச்சு, இப்ப சாதியெல்லாம் யார் சார் பாக்குறாங்க?” மத்திய வர்க்கத்தினர் உரையாடல்களில் தவறாமல் யாராவது ஒருவர் இப்படி சொல்வதுண்டு. நகரங்ளிலும் தொடர்ந்து தலைவிரித்தாடும் சாதி வெறி, கிராமத்தில் இன்னும் தொடரும் அடக்குமுறை அவலம் என சாதி மனோநிலை இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை சமூக ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் சுட்டி காட்டினாலும் அது பெரிதாக விவாதங்களுக்கு வந்து சேர்வதில்லை.

    “இப்போ அங்காங்கே நடக்கிறதை வைச்சு சாதி வெறி சாதி வெறின்னு சொல்லாதீங்க சார். இண்டர்நெட், செல்போன் காலத்துல அடுத்த தலைமுறையில சாதி உணர்வெல்லாம் சுத்தமா இருக்காது சார்.” இதுவும் அந்த உரையாடலின் போது சொல்லப்படுவது தான். அடுத்த தலைமுறையில் சாதி உணர்வு குறைந்து இருக்குமா? இந்தக் கேள்விக்குப் பதிலைத் தேடும் போது நிறைய அதிர்ச்சி தகவல்கள் தான் கிடைக்கின்றன.

    தலித் மாணவர்களைத் தாக்கும் சக மாணவர்கள்

    இந்த மாதம் மட்டும் தலித் மாணவர்கள் சக பள்ளிக்கூடத்து மாணவர்களாலே தாக்கப்படும் சம்பவங்கள் மூன்று நடந்துள்ளன. மதுரை அருகே உசிலம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.… …மேலும் வாசிக்க


  • நேற்று காலை பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. நேற்றைய மாலை நாளிதழ்களும் இன்றைய காலை நாளிதழ்களும் தேர்வு முடிவுகளையும் அதில் முதலிடம் வகித்தவர்களையும் பற்றி பக்கம் பக்கமாக எழுதி பிரசுரித்து இருக்கிறார்கள். புத்திசாலி பள்ளிக்கூடங்கள் தங்களது சந்தை மதிப்பை உயர்த்தி கொள்ள இந்த சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்க்கின்றன. மாவட்ட அளவில் தங்களது மாணவர் ஒருவர் எதாவது ஒரு பாடத்தில் முதலிடம் பெறுவதை நேரடி விளம்பரமாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ பத்திரிக்கைகளில் பிரசுரிக்க அவை ஆர்வமாய் ஓடி வருகின்றன. இன்று ஒரு பள்ளியின் முதல்வர் முதலிடம் பெற்ற ஒரு மாணவன் மற்றும் மாணவி இருவரையும் தன் இருபக்கமும் நிறுத்தி கை கோர்த்து கைகளை உயர்த்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருந்தார். குத்துச் சண்டை நடுவர், போட்டியின் இறுதியில் வெற்றியாளரை கையை உயர்த்தி அறிவிப்பாரே அப்படி இருந்தது அந்த போஸ்.

    எனக்கு தெரிந்து மகனின் தேர்விற்காக இரண்டு மாதம் மூன்று மாதம் தனது அலுவலகத்தில் விடுப்பு எடுத்த தாய்மார்கள் எல்லாம் உண்டு.… …மேலும் வாசிக்க


  • எங்களுக்கு கல்வி வேண்டாம்.
    எங்கள் எண்ணங்களை நீங்கள் கட்டுபடுத்த வேண்டாம்.
    பள்ளிக்கூடத்தில் வார்த்தைகளில் விஷம் ஊற்ற வேண்டாம்.
    குழந்தைகளை தனியாக விடுங்கள்.
    ஆசிரியர்களே குழந்தைகளை தனியாக விடுங்கள்.
    எல்லாமே சரியாக தான் இருக்கிறது.
    சுவரில் அது மற்றொரு செங்கல்லாக தான் இருக்கிறது.
    நீங்களும் அங்கே இன்னொரு செங்கல் தான்.

    – பிங்க் ஃபிளாயிட், ராக் இசை கலைஞர்

    கட்டாய கல்வி என்று ஒன்று கிடையாது. கல்வி எங்கள் அடிப்படை உரிமை என்கிற வாசகமே சரியாக இருக்கும். கல்வியுரிமை (right to education) ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று அமுலுக்கு வந்ததாக சொல்லி இருக்கிறார்கள். வழக்கம் போல பாராட்டு வாசகங்கள், சிற்சில விமர்சனங்கள். ஆனால் அதிகார பாதைக்கு இது ஒரு மைல் கல். தங்களுடைய பெருமையாக பறைசாற்றி கொள்ள ஒரு சாதனை.

    ஆறு வயதில் தொடங்கி 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கல்வி அளிக்கபட வேண்டும். தற்போது 22 கோடி குழந்தைகள் இந்த வயதில் இருக்கிறார்கள்.…மேலும் வாசிக்க


  • நான் பள்ளியில் இருந்த போது பிரம்பிற்குப் பேர் பெற்ற ஒரு டீச்சரம்மா இருந்தார்கள். அவரைக் கண்டாலே மாணவர்கள் நடுங்குவார்கள். ஐந்தாம் வகுப்பு வரை இருந்த ஒரு கிருஸ்துவ பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தாம் மூத்தவர்கள். அவர்களின் வகுப்பு ஆசிரியை தான் நம்ம பிரம்பு டீச்சரம்மா.

    நான்காம் வகுப்பில் இருக்கும் போதே அடுத்த வருடம் பிரம்பு டீச்சரம்மாவிடம் பிரம்படி வாங்க வேண்டுமே என எல்லாரும் பயந்து போய் இருந்தோம். தினமும் காலை பள்ளி மைதானத்தில் வெயிலில் முட்டி போடும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்; ஐந்தாம் வகுப்பு அறையிலிருந்து கேட்கும் அலறல் சத்தங்கள் என தினமும் எங்கள் திகில் அதிகரித்தபடி இருந்தது. அடுத்த வருடம் நான் வேறு பள்ளிக்குப் போய் விடுவேன் என ஒருவருக்கொருவர் சொல்லி எங்களை நாங்களே ஆறுதல்படுத்தி கொள்வோம். ஆனால் எங்களது பெற்றோர்கள் யாரும் எங்களது பயத்தினைப் பொருட்படுத்தவேவில்லை.

    நாங்கள் ஐந்தாம் வகுப்பிற்குப் புலம் பெயரும் நாளும் வந்தது. முதலிரண்டு நாட்கள் அமைதியாக போயின.… …மேலும் வாசிக்க