வார்த்தைகளை திருடிச் சென்றவன்
சற்று முன்பு எனது வார்த்தைகளை திருடிச் சென்றவன்
இதோ இந்த நகரின் ஏதோ ஓர் இருள்சந்தினுள்
அதனை திறந்து பார்ப்பான்.
எதை எடுத்து கொள்வான், எதை எறிந்து செல்வான் என தெரியவில்லை.
திருடியவன் தன் வழியில் எங்காவது எதாவது கொட்டி இருக்கிறானா என
என் பாட்டி பாதை எங்கும் தேட போய் விட்டாள்.
மௌனத்தை வாயில் மென்றவாறு சலித்து கொள்கிறேன் நான்.
ம்.. நல்லதொர் படிமம்.
எதோ / ஏதோ – எது சரி சாய், இரண்டும் சரின்னா ஓகே.
//எதை எடுத்து கொள்வான், எதை எறிந்து செல்வான்//
இப்படியும் சொல்லாமா இரண்டு வார்த்தைகளை குறைத்து?
அசோக் உங்கள் யோசனைகளை ஏற்று திருத்தங்களை செய்து இருக்கிறேன். நன்றி.
//mounaththai mendravaaru// – this is nice. 🙂
@ கார்த்திகா – மிச்சமிருப்பது மௌனம் மட்டுமே என்னும் போது என்ன செய்வது? வருகைக்கு நன்றி.
Mounam mattum udanirukka… Idhu dhan nilai… 🙁
சொற்கள் திருடப்பட்ட பிறகு மௌனத்தினை மெல்லுவது தவிர வேறு வழியில்லை. நல்லதொரு சிந்தனை சாய்ராம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா