இந்த போரில் யாருக்கும் வெற்றியில்லை

மனிதர்களும்,
மிருங்களும்,
பறவைகளும்,
மனித தலையும் விலங்குகளின் உடலை கொண்டவர்களும்,
பறவைகளின் இறக்கை கொண்டு பறக்கும் கொடிய மிருகங்களும்,
மாயஜால மந்திரவாதிகளும்,
சூன்யக்காரிகளும்,
வீரத்திற்கு புகழ் பெற்ற தளபதிகளும்,
தந்திரத்திற்கு பேர் வாங்கிய தலைவர்களும்
போரிடுவதற்காக கூடும் இந்த போர்க்களம்
இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இரத்த கறையோடு விளங்க போகிறது.
நீயும் நானும் பிறப்பதற்கான முதல் வித்து
தோன்ற போவதும் இங்கு தான்.
நம் இனத்தின் கடைசி சாபம் உருவாகும் இடமும் இது தான்.