விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம்

விடுதலைப்புலிகளின் தற்போதைய வீழ்ச்சிக்கு பல காரணங்களை பல நிபுணர்கள் விவாதிக்கக்கூடும். ஆனால் நான் சொல்லும் காரணம் சற்று வேறு வகைப்பட்டது. கண்ணுக்கு எளிதில் புலப்படாதது. ஆழ்ந்து பார்க்கின் பின்புலத்தில் இருந்தவாறு காட்சிகளை இயக்கும் வல்லமை படைத்தது.

தேசியத்தின் எழுச்சி

பனிப்போர் நடந்த காலத்தில் அமெரிக்க அரசும் சோவியத் யூனியனும் உலகத்தை இரு நிலைகளாக வைத்திருக்க முயன்றன. இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் மற்றொரு நாடு அரசியல் செய்ய முயன்றது. இதன் காரணமாக உள்நாட்டு கலகங்களுக்கு வெளியுலக அங்கீகாரமும் ஆதரவும் இருந்தன.

ஆப்கானிஸ்தானில் தாலிபானின் முன்னோடிகளை வளர்த்தது அமெரிக்கா தாம். சோவியத் யூனியனுக்கு எதிராக தாலிபானின் முன்னோடிகள் உருவானார்கள். இன்று சீனா இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் கலகக்காரர்களை வளர்த்து விடுவதும், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் கலகக்காரர்களை ஆதரிப்பதும் இதன் நீட்சிகளே. இந்த போக்கு இன்னும் தொடர்கிறது என்றாலும் இன்று அதனை வெளிபடையாக செய்ய இயலாத நிலை தோன்றியிருக்கிறது. காரணம் பனிப்போர் ஓய்ந்த பிறகு ஒரு நாட்டு அரசாங்கத்தின் அதிகாரம் பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது. ஓர் அரசின் செயற்பாடுகளை வேறு நாடு கேள்வி கேட்டால் அது அந்த நாட்டு இறையாண்மைக்குள் தலையீடுவதாக குற்றம் சாட்டபடுகிறது.

தேசியம் வலுப்பட்ட பிறகு தேசியத்தை கேள்வி கேட்பது மிக பெரிய குற்றமாக பாவிக்கபடுகிறது. பிரிவினைவாதிகள் மிக கொடூரமான தீவிரவாதிகளாக சித்திரிக்கபடுகிறார்கள்.

பனிப்போரும் அதற்கு முந்தைய காலமும் கலகக்காரர்களை போராளிகளாக நாயகர்களாக கொண்டாடியது. சே குவாரா, மகாத்மா காந்தி ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள் தான். இன்று அவர்கள் இருந்திருந்தால் அவர்களையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி இருப்பார்கள்.

எந்த அதிகாரமும், யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என சொல்லும் அதிகாரமும் ஓடாத தண்ணீர் போல தான். நாற்றமெடுத்து போகும். கம்யூனிசத்தை தொடர்ந்து விவாதித்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என சொன்னார் மார்க்ஸ். ஏன் எனில் ஓர் அதிகாரம் விவாதத்திற்கு உரியதாய் இல்லாமல், யாரும் கேள்வி கேட்க இயலாத வேதமாக பாவிக்கபட்டால் அதன் விளைவு சர்வதிகாரமே.

தேசியம் இன்று பலம் பொருந்திய அதிகாரம். கலகக்காரர்கள் பயங்கரவாதிகளாய் சித்திரிக்கபடுகிறார்கள்.

தேசியம் இத்தகைய சர்வதிகார சக்தியை பெறுவதற்கு முன்பு கலகக்காரர்களாய் இருந்தவர்கள் இன்று தேசியம் வளர்ந்த பிறகு ஒன்று அழிக்கபட்டு விட்டார்கள். அல்லது தேசியத்தை சார்ந்து மிதவாத தளத்திற்கு நகர்ந்து விட்டார்கள்.

விடுதலைப்புலிகள் இலங்கை நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும் மூன்றில் இரண்டு பகுதி கடலையும் தன் அதிகாரத்திற்கு கீழ் ஒரு காலத்தில் வைத்து இருந்தவர்கள். அவர்களது படை வலிமை உலகளவில் சிறந்தது என பாராட்டபட்டது. ஆனால் பாலஸ்தீனத்தில் கலகக்காரர்களுக்கு கிடைத்த நண்பர்கள் போல் விடுதலைபுலிகளுக்கு நண்பர்கள் அமையாமல் போனார்கள். அல்லது அவர்கள் அந்த நட்பு வளையத்தை பெருக்கி கொள்ள இயலாமல் இருந்து விட்டார்கள். இன்னும் மோசம் ராஜீவ் காந்தி படுகொலை போன்ற சம்பவங்களால் தங்களது சர்வதேச நட்பு வளையத்தை சேதபடுத்தி கொண்டார்கள்.

யாசர் அராபத் பாலஸ்தீனத்தின் அதிபராக பொறுப்பேற்று கொண்ட காலத்திற்கு முன்னரே விடுதலைபுலிகள் ஒரு வேளை தங்களது ஆளுமைக்குட்பட்ட பகுதியில் தேர்தல் நடத்தி (அல்லது ஒரு தேசியத்தின் சாயலில் இயங்கி இருந்தால்) பல நாட்டு தூதுவர்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இருந்தால் இன்றைய நிலை வேறு மாதிரி இருந்து இருக்கலாம்.

எந்த உள்நாட்டு கலகக்காரர்களும் வன்முறையை கையாளாமல் இருந்தது இல்லை. ஏன் பகத் சிங் கூட வன்முறையாளர் தாம். ஆனால் இன்றைய நிலையில் போர் திறனும் படைபலமும் மட்டும் கலகக்காரர்களை காப்பாற்றி விடாது. தேசியத்தின் வளர்ச்சிக்கு முன் அரசு இயந்திரத்தின் கேள்வி கேட்க முடியாத அதிகாரத்தின் முன் உலக தேசிய அரசாங்கங்களின் ஒன்றை ஒன்று தழுவி கொள்ளும் புரிதல் உணர்வுக்கு முன் இன்று கலகக்காரர்களின் பலம் ஒன்றுமில்லாததாக மாறி விட்டது.

9/11 சம்பவத்திற்கு பிறகு ‘தீவிரவாதி,’ ‘பயங்கரவாதி’ ஆகிய வார்த்தைகள் புதிய அர்த்தத்தில் பயன்படுத்தபடுகின்றன. ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என சொற்றொடரில் உள் அர்த்தங்கள் ஆயிரமாயிரம் இருக்கின்றன. ராஜபக்க்ஷே தனது போரை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என சொல்லுவதன் அர்த்தம் என்ன? இந்திய அரசாங்கம் ‘இலங்கை பயங்கரவாதிகள்’ என விடுதலைப்புலிகளை சொல்வதற்கான அர்த்தம் என்ன? குழந்தைகளை கட்டாயபடுத்தி தங்கள் படைகளில் சேர்க்கிறார்கள் என பிரச்சாரத்தை ஓயாமல் சொல்வதன் அர்த்தம் என்ன?

உலகம் முழுவதும் தேசியத்தின் எழுச்சிக்கு நிகராய் தன்னை வளர்த்து கொள்ளாமல் தொடர்ந்து கலகக்காரர்களாய் இருந்ததே விடுதலைப்புலிகளின் இன்றைய வீழ்ச்சிக்கு காரணம்.

ஓவியம்: Salvador Dali 


Comments
5 responses to “விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம்”
  1. I thought you are going to write something in detail. But .. disappointingly, only the beginning is there.

  2. mokkai… weast pathivu…

  3. யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வருகின்ற மக்கள் பலரைச் சந்தித்த அல்ஜசீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் டேவிட் சாட்டருடைய வாக்கு மூலமும் இங்கு குறிப்பிடத்தக்கது. ”பெருமளவிலான அகதிகளுடன் கதைத்ததில் அவர்கள் தமிழ் புலிகளின் தலைமை தங்களை நடத்தியது தொடர்பாக மிகவும் வெறுப்புடன் உள்ளனர். புலிகளின் தலைமை தொடர்பாக தமிழ் பொது மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய தலைமை, தமிழ் மக்களுக்கான தாயகத்தை உருவாக்குவதற்காக போராடுபவர்கள், அவர்களை சுரண்டுகிறார்கள், அவர்கள் யுத்தத்தில் இருந்து தப்பியோடும் போது சுடுகின்றார்கள், யுஎன் வழங்கிய மனிதாபிமான உதவிகளையும் களவாடுகின்றனர்.”

    புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யுத்தத் தவிர்ப்புப் பகுதியில் பொருட்களின் விலை உச்சமாக இருப்பதாக ஐபிசி வானொலிச் செய்திகள் தெரிவித்து இருந்தது. கடந்த பல மாதங்களாக ஐசிஆர்சி ஊடாக யுஎன் உலக உணவுத்திட்டம் அனுப்புகின்ற உதவிகளைத் தவிர எவ்வித விநியோகமும் இருக்கவில்லை. இந்த விலைக்கு விற்கப்பட்ட உணவுகள் என்பது உணவுத் திட்டத்தின் கீழ் அனுப்பப்ட்ட உணவுப் பொருட்களே. தற்போது வெளியேறும் மக்கள் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவிக்கும் விபரங்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றன. யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்த தந்தையொருவர் அல்ஜசீரா தொலைக் காட்சியில் தாங்கள் அங்கு சாப்பாட்டுக்கு மிகவும் கஸ்ரப்பட்டதாகவும் யுஎன் அனுப்பிய உணவுகளை வாங்கவும் தங்களிடம் காசு இருக்கவில்லை என்றும் அவை உச்ச விலைக்கு விற்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    இலங்கை இனவாத அரசு தமிழ் மக்கள் மீது பொருளாதாரத்தடையை விதித்து உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு இராணுவத் தாக்குதல்களை கண்மூடித்தனமாக நடாத்த தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிய புலிகள், அந்த இனவாத அரசு சர்வதேசத்தில் தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள அனுப்பிய குறைந்தபட்ச உணவையும் மக்களிடம் சேரவிடாமல் தடுத்து வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தங்களது பாதுகாப்பிற்காகத் தடுத்து வைக்கப்பட்ட மக்களுக்குக் கூட அவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உணவைக் கூட புலிகள் அம்மக்களுக்க வழங்கவில்லை. குழந்தைகளைக் கொண்ட தனது குடும்பம் உணவில்லாமல் பட்டினியால் பட்ட அவஸ்தையையை அத்தந்தை தொலைக்காட்சியில் விபரித்தார்.

  4. உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

    பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

  5. Anonymous Avatar
    Anonymous

    I am not a SL Tamil.

    Your point is that the Tamil rebels should have understood the sweeping changes that have taken place in the recent times in the world post 9/11 and the new definition of separatist struggle (which definition is hostile to such liberation struggle labeling it as terrorism!), and conducted general elections to usher in a democratic process in the North SL.

    They didn’t. That has made them the pariahs of the world; and consequently, face the final disaster.

    Here, as you know quite well, the rebels did manage and run a government at their land with Killinochi as their capital. We were told, and perhaps, you, as a SL Tamil, may know it firsthand, the people were happy with their government: their taxation, judicial administration etc.

    The only thing the rebels had failed to do, or, rather, postponed doing it, is conducting general elections.

    In my view, they would have done it. But circumstances were not ideal for it.

    Why? To run a government efficiently, for a long time, and to establish a stable country which will be recognized by other countries, you need expert citizens or leaders or civil servants drawn from the very people. Such people among Jafna Tamil population are today non-existent as almost all of them have fled the country, never to return. The life abroad is far better and they wont return at all.

    So, the rebels are left with a ragamuffin, rag-tag people, and the civil servants were none other than those drawn from the rebels themselves. Possessing only rudimentary education which wont help run a country, they were dragged into war, even in the middle of their school years, and trained only in handling war arsenal. With such people, a country cant be created. The rebel leaders would have understood the truism; and, perhaps, waited for the Tamil diaspora to return.

    Thus, as you see, it is like biting more than they can chew. They could not do it.

    Next, they couldn’t give up arms. Because, that will be like giving away their hard-won land back into the hands of Sinhalese whose only ambition is to enslave Tamils in order to keep them under their tight control, like lap dogs or like the galley slaves in ancient Greece or Rome.

    Only the compulsory war with Sinhalese that has prevented the rebels to do all that you, the bloger, wish. The fear that they will lose all that they had won; and of going back to either slavery or to face genocide at the hands of well-placed Sinhalese.

    I am sorry for all of you, SL Tamils!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.