நிறைந்த பேச்சு
மிகவும் சாதாரண உரையாடல் தாம்.
பரஸ்பர நலம் விசாரிப்பு.
பார்க்கலாமென சம்பிரதாய விடை பெறுதல்.
பல மணி நேரம் கழித்து
திருமண மண்டபத்தை காலி செய்து
நாற்காலிகளை அடுக்கி கொண்டிருக்கிறார்கள்.
மண்டபமெங்கும் நிறைந்திருக்கின்றன
அவள் கண்களால் உரையாடியவற்றின்
விளக்கவுரைகள்.
yaaraiyo mandabathula paarthu feel pannirukkeenga pola!!!