ராஜகுமாரியும் ஏழு தவளைகளும்

இளமையின் ஒளி சூழ பிரகாசிக்கிறாள் ராஜகுமாரி.
கண்களில் பரிவும் அன்பும்.
உதடுகளில் பூக்கிறது காமம்.

இரவு வானத்தில் தோன்ற போகிறது
அந்த அரிய ஒளிக்கீற்று.
உலகின் கடைசி தருணங்களை
கணத்திற்கு கணம்
மெதுவாக நகர்த்திட துடித்திடுவது போலொரு முத்தம்.

நீரின் சிலிர்ப்பை மறந்து
ஆவலாய் காத்திருக்கின்றன
ஒன்றை போலவே இருக்கும் அந்த ஏழு தவளைகளும்.
கல்லாக மாறி போயிருக்கின்றன அந்த காத்திருத்தல்.

எங்கோ கல் ஒன்று
சரிந்தோடி பள்ளத்தில் இருக்கும் நீரில் விழுந்து
அமைதியை குலைக்கிறது.
வானம் இருளினை விழுங்கி தயாராகிறது.


Comments
2 responses to “ராஜகுமாரியும் ஏழு தவளைகளும்”
  1. இது என்ன பஞ்ச தந்திரக் கதையா சாய்?

    1. long time no see ashok!
      பஞ்ச தந்திரக் கதை மாதிரியா இருக்கு! கவிதை மாதிரி இருக்கட்டும் என்று தானே நினைத்தேன். 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.