மொட்டை மாடியில் தொடர்ந்து உலாவுபவர்களை
சாதாரணமாய் வெளியிடங்களில் இனம் காண முடியாது.
நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களும்
இருபது வயதிற்கு உட்பட்டவர்களுமே அதிகம்.
கிராமத்தில் தனது வீடு மட்டுமே காங்கிரீட் வீடு என்கிற
அகங்காரத்தின் காரணத்தினால்
தன் மொட்டை மாடியில் உலா வந்த சிறுவன் பாண்டி.
இளைஞன் ஆன பின் கல்லூரி ஹாஸ்டலிலே
மொட்டை மாடியில் தான் அரட்டை கச்சேரி
விடிய விடிய அரங்கேறும்.
திருமணத்திற்கு பிறகு
அறியா நகரத்தின் பற்கள் கொடுத்த காயத்தை போக்க
மனதை லேசாக்க மொட்டை மாடியில் அமர்ந்து
கண்ணுக்கெட்டிய தூரம் மனிதர்களும் கட்டிடங்களுமாய் தெரியும்
நகரத்தை பார்வையால் வெறித்திருப்பான்.
மனைவியின் மரணத்திற்கு பின்பு
மகனுக்கும் மருமகளுக்கும் கூடுதல் சுமையாய்
தன்னை கருதி வாழும் பாண்டிக்கு
இருப்பதெல்லாம் ஒரு பிரச்சனை.
அவர்கள் அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் மொட்டை மாடியில் யாருக்கும் அனுமதியில்லை.
இறந்து போனான் விரைவில்.
சொர்ணம்மாளுக்கு மொட்டை மாடியில் தான்
தன் முதிய வயது ஒத்த தோழிகள் உண்டு.
மருமகளை பற்றி பேச பேச குறையாமல் இருக்கும் புகார்கள்.… …மேலும் வாசிக்க
