பைக்கின் உறுமல் ஒலியை காற்றில் மிதக்க விட்டு
அவன் என்னிடமிருந்து விடை பெற்று சென்று
சில கணங்கள் தாம் கடந்திருக்கும்.
கத்தியை கூர் தீட்டுவது போல ஒரு சத்தம்.
அவன் சென்ற திசையில்
யாரோ பைக்கிலிருந்து தூக்கியெறியபடுவதை பார்த்தேன்.
அதற்கு பிறகு நான் திரும்பவே இல்லை.
எதிர் திசையில் நடந்து கொண்டே இருந்தேன்.
முதிர் மாலை நேரத்து இருள்.
யார் என தெளிவில்லை.
அவனாக இருக்குமோ?
துப்பட்டாவை இழுத்து போர்த்தி
வீட்டை நோக்கி நடந்தேன்.
ஏற்கெனவே தாமதமாகி விட்டது.
தந்தை திட்டுவார்.
விபத்தின் தாக்கம் ஓர் அலை போல என்னை கடந்து சென்றது.
சிலர் அந்த பக்கம் ஓடினார்கள்.
சிலர் வெறித்தபடி பார்த்து கொண்டிருந்தார்கள்.
அவனாக இருக்காது.
வேறு யாரோ.
யாரோ ஒரு குடிகாரன்.
அவனாக இருந்தால் அவனுக்கு இப்போது உதவி தேவைபடும் அல்லவா?
அவனுக்கு விபத்து நேர்ந்ததை நான் பார்த்தேன் என யாருக்குமே தெரியாது.
அவனுக்கே தெரியாது.
இயந்திரங்களின் பிடியில் சிக்கிய பிரதான வீதிக்கு வந்த போது
அந்த விபத்து நடந்ததற்கான அறிகுறியே இல்லை.… …மேலும் வாசிக்க





