Author: சாய்ராம் சிவகுமார்

  • மனிதர்கள் – நான் கடவுள்

    சில சமயம் சீனா மாதக்கணக்கில் காணாமல் போவார். பிறகு திரும்ப வருவார். சினிமா, தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவற்றில் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களிடம் பணம் வாங்கி தன் அன்றாட செலவுகளை கவனித்து கொண்டார். மனநலம் தவறுகிறவர்கள் தங்களது உள் மன அழுக்குகளை வெளிபடையாக பேசும் அவலம் இருக்கிறது. சீனா தன்னை விட நல்ல எழுத்தாளன் இந்த உலகத்தில் இல்லை என பேசி கொண்டிருப்பார். சில சமயம் கடவுளின் தூதுவன் என்றும், ஒன்றிரண்டு முறை தானே கடவுள் என்றும்…

  • மது வாடையடிக்கும் மாலை பொழுதில்

    எங்கிருந்தோ இருள் உதிப்பதற்குள் கலைக்கபட்ட ஓவியங்களை நான் சீராக்கி வார்த்தைகளுக்குள் சேமிக்க வேண்டும்.

  • மனிதர்கள் – கொலை செய்யப்பட்ட ரவுடி

    பாண்டிச்சேரி பஸ் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள பார்களிலோ திரியும் வெளியூர் சபல கேஸ்களை சிறுவர்கள் தங்கள் ஏரியாவிற்கு பேசி அழைத்து செல்கிறார்கள். அங்கே ஆசை வார்த்தைகளுக்கு முரணாக நிஜம் இருப்பதால் இந்த சபல கேஸ்கள் சண்டையிட தொடங்கும் போது இளைஞர்கள் உள்ளே நுழைந்து இரண்டு தட்டு தட்டி பிரச்சனையை சரி செய்வார்கள். சில சமயம் ஏரியாவிற்குள் வரும் சபல கேஸ்களை கண் மண் தெரியாமல் தாக்கி அவர்களது நகை பணத்தை கொள்ளையடித்து கொள்வதும் உண்டு. பாதிக்கபட்டவர்கள்…

  • பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் – புது தகவல்கள்

    நாம் வாழும் பிரபஞ்சம் எப்படி உருவானது? அதற்கு முன் என்ன இருந்தது? தொடக்கத்திற்கு முன் எதாவது இருந்ததா? ஒன்றுமில்லாத நிலையில் இருந்து பிரபஞ்சம் உருவானதா? ஒன்றுமில்லாத நிலை என்று ஒன்றுண்டா? இப்படி பல கேள்விகள் எல்லாருக்கும் உண்டு. இதற்கெல்லாம் அறிவியல் பதில் கண்டு பிடித்து விட்டதா என்றால் இல்லை. ஆனால் இப்படியாக இருக்கலாம் என சில அறிவியல் தத்துவங்கள் உண்டு. அத்தகைய அறிவியல் தத்துவங்களில் சமீப காலத்தில் புது புரட்சி ஒன்று நடந்திருக்கிறது.

  • மனிதர்கள் – காப்ரே நடன பெண்ணை மணந்தவன்

    சில வருடங்களுக்கு முன்பு எல்லா ஆண்களை போலவே கல்யாணிற்கும் காதல் பிறந்தது. பிறந்த இடம் தான் கொஞ்சம் வித்தியாசமானது. மும்பையில் நண்பர்களுடன் காப்ரே நடனம் பார்க்க சென்ற கல்யாணிற்கு அங்கு நடனமாடிய தமிழ் பெண்ணை பார்த்தவுடன் காதல் பிறந்து விட்டது. அதற்கு பிறகு வெகு பிரயத்தனப்பட்டு அந்த பெண்ணின் அபிமானத்தை பெற்று, அவளது தாயிடம் நற்பெயரை பெற்று தன் குடும்பத்தின் எதிர்ப்பிற்கிடையே அந்த பெண்ணையே மணந்து கொண்டார்.

  • ஜுன் 6 – இந்தியாவில் இன்று பெரும்பாலனோருக்கு பிறந்த நாள்

    பள்ளிக்கூடங்களில் முதல்முறையாக தங்கள் மகன், மகள்களை சேர்க்க செல்லும் பெற்றோர் அவர்களது பிறந்த நாளை சொல்ல திணறுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் இது அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை என்பதால் இதற்கு ஒரு தீர்வு வைத்திருந்தார்கள். அது தான் கண்ணை மூடியபடி அப்படி அப்பாவியாக வந்து நிற்கும் மாணவர்களுக்கு வயது ஐந்து, பிறந்த நாள் ஜுன் 6 என குறித்து கொள்வது. இந்த தேதியே பள்ளிக்கூட காலண்டருக்கு ஏற்ற பிறந்த நாள்.

  • மனிதர்கள் – போதையே வாழ்க்கை

    லீமா யாரிடமும் அதிகமாய் பேச மாட்டான். நசுங்கிய மூக்கும் அந்நிய நிறமும் சென்னையில் அவனை இன்னும் அமைதியானவனாய் மாற்றி விட்டது. கல்லூரியில் சேர்ந்த ஓரிரு மாதங்களில் மணிப்பூர் மாணவர்கள் வேறு சிலர் வேறு கல்லூரியில் படிப்பவர்கள் அவனை சந்திக்க அடிக்கடி வர தொடங்கினார்கள். கஞ்சாவும் சிகரெட்டும் மதுவும் தினசரி பழக்கங்களாயின.

  • மனிதர்கள் – பிரம்பு டீச்சரம்மா

    பிரம்பு டீச்சரம்மாவை பற்றி நான் இரகசியமாக போலீசிற்கு கடிதங்கள் எழுத தொடங்கினேன். ஆனால் என் கடிதங்களை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. கடிதம் எழுதியவரின் பெயர் இல்லை என்பதால் உதாசீனபடுத்தியிருப்பார்கள் என தோன்றியது. டீச்சரே தன்னை பற்றி புகார் எழுதுவதாய் கடிதம் எழுதினேன். அந்த ரகசிய கடிதங்களை பற்றி அறிந்த மற்றொரு நண்பன் என்னை இதன் காரணமாய் பல காலமாய் பிளாக் மெயில் செய்து கொண்டிருந்தான். ஓரிரவு கனவில் பள்ளி மைதானத்தில் பிரம்பு டீச்சரை ஒரு ராட்சஸ கழுகு…

  • காதலிக்காக காத்திருக்கும் போது நடந்த விபத்து

    ஆறுதல் வார்த்தைகளோ அன்பு அரவணைப்போ எதிர்பார்க்கவில்லை. போய் விடு.

  • மனிதர்கள் – பாலைநிலத்து நிருபர்கள்

    எதோ கேங்க் லீடர் போல ஊரிலிருக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சூழ தான் உதவி ஆசிரியர் இருப்பார். நிறுவன வேறுபாட்டின்றி அந்த ஊரில் இருக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்களும் அவரது கட்டுபாட்டில் தான் இருந்தார்கள். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் எந்த மன கசப்பும் இல்லாமல் ஒன்றாக இருக்கிறார்கள். ஒரே ஊரில் வசிக்கும் சொந்தக்காரர்கள் ஒருவருக்கொருவர் உரிமையோடு பேசி கொள்வது போலவும், ஒருவரது தனிப்பட்ட பிரச்சனைகளை அறிந்து வைத்திருப்பது போலவும் நிருபர்கள் குழு பழகியதை பார்த்தேன்.