ஓரினமாதல்

என்றோ ஒரு நாள்
யாரோ ஒருவர்
மரத்தின் மீது எறிந்துச் சென்ற
கருநீல நெடிய வயர் ஒன்று 
மரத்தோடுப் பிணைந்து 
தண்டோடுச் சுற்றி
பட்டைகளோடுக் கலந்து
பழுப்பாகி போனது.

இளவேனில்காலத்தின் தொடக்க நாளொன்றில்
அந்த வயரினுள் இருந்து
முளைத்தது
ஓர் இலை.