என் கண்களை உற்று பார்த்து

என் கண்களை உற்று பார்த்து

என் கண்களை

உற்று பார்த்து

நீ பேசியது…

சுவரேறிய பல்லி

என்னைப் பார்த்த போது

ஏன்

நினைவிற்கு வந்தது?

மின்விசிறியின் நிழல்

சுவரில் தடுமாறுவதைப் பார்க்கும் போது

படபடக்கும் உன் இமைகள்

ஏன் நினைவிற்கு வந்தது?

எது எதுவோ

எதை எதையோ

இழுத்து வந்து போடுகிறது.

என் மனம்

உன் நினைவுகளை

மட்டும்

கோர்த்து கோர்த்து

அர்த்தம் கற்பிக்க முயன்று

தோற்று போகிறது.

கலைந்த சேற்றில்

ஓர் ஓவியம்

பாவித்து கொண்டு

கலைந்த மேகங்களை

ஒரு சித்திரமாக

மனத்திரையில் தீட்டி கொண்டு

சுவற்றில் அடித்த சிறுநீரின்

தடமோன்று தீட்டிய கதை வாசித்து

மறந்து போன உன் முகத்தை

மறக்காத உன் நினைவுகளை

பற்றி கொண்டு மட்டும்

வாழ்கிறது

ஒரு மனம்.