வெண் மஞ்சள்
தெரு ஒன்று
    கட்டிடங்களின் காலடியில்.
விறுவிறுவென நடந்தபடி
    இருக்கிறார்கள் மனிதர்கள்
எதையோ யோசித்தபடி
    எங்கோ வெறித்தபடி.

தன்னைமறந்து கூட்டத்தினைப் 
    பார்க்கும் நாய்கள்.
விண்ணில் அலட்சியபார்வை
    பார்த்துநகரும் காகங்கள்.
மண்துகள்கள் பறக்கின்றன
    தார் ரோட்டில்.

அனல் காற்றோடு
    பெருகுகிறது வெக்கை.
வேர்வை மிகுந்தோடுகிறது
    ஒவ்வொருவர் மீதும்.
வெண் மஞ்சளாய்
    மங்குகிறது காட்சி.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.