எப்போதும்

எப்போதும்

ஒரு கோப்பை தேநீர்,
துளிர்த்து தொடங்கும் காமம்,
வானத்தில் பரவி கிடக்கும் மரக்கிளைகள்,
என்றோ வாய்க்கிற மாடி தருணம்,
பொதுவில் பார்க்கிற அந்நியர்கள் என
எல்லாம் அமிழ்ந்து போகிறது
மனதினுள் எப்போதும்
பெய்து கொண்டிருக்கும் மழையில்.