எங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால்
சாலைக்கு அப்பால்
சுவரில் பிரகாசிக்கும்
ஊரில் உள்ள ஒற்றை தியேட்டரின்
சினிமா போஸ்டர்.
முதலில் வண்ணங்கள் ஜொலிக்கும்.
சில மணி நேரங்களில்
வரிகளும் கசங்கல்களும்
மனப்பாடமாகும்.
வண்ணம் மனதில் தோய்ந்து தோய்ந்து
அடுத்த போஸ்டர் எப்போது எப்போது என
மனம் அலைபாய தொடங்கும்.
யுகங்களாய் காத்திருத்தல் தொடரும்.
என்னென்ன வண்ணங்கள்
என்னென்ன முகங்கள்
என கற்பனைகள் விரியும்.
ஒரு நாள் பளிச்சென அடுத்த போஸ்டர்
பிரகாசிக்க தொடங்கும்.
Leave a Reply to NADINARAYANAN Cancel reply