சாலை விளக்குகளும்
எதிர் வரும் வாகனங்களின் விளக்குகளும்
கலந்து இணைந்த பிறகும்
தொடர்கிறது பயணம்.
நிற்காமல் ஓடும் தார் சாலையும்
ஹம் சத்தமும்
வாகனத்தை இயக்குகின்றன.
கண்கள் விழித்திருக்க
கனவுகள் தார் மணத்தோடு
புகையுருவில்
நடனமாடுகின்றன.
எதோ துக்கம் இருக்கிறது.
அது பயணத்தின் முடிவில் காத்திருக்கிறது.
அது என்ன என்பது இப்போது நினைவில் இல்லை.
ஹம் சத்தத்தோடு
வெறுமை தரும் சோகம் இப்போதைக்குப் போதுமானது.
Leave a Reply to Ravishankar Ayyakkannu Cancel reply