கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்

கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில்.
சோகம் ததும்ப
அது நகருகையில்
வானத்தில் இருந்து
மேகங்களாய் கீழ் இறங்குகின்றன
கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும்.

நிகழ் காலத்தில் ரயில்.
கடந்த காலத்திற்கு அவற்றை இழுத்து செல்ல
வலுவற்ற கரங்களால் பிரயத்தனபடுகின்றன மேகங்கள்.

உருவாகிறது
சோகத்தின் பெருமழை.


Comments
One response to “கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்”
  1. கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்.. நல்ல படிமம்!

    கவிதை மிக நன்று! ரசித்தேன்! வாழ்த்துகள்!

Leave a Reply to அப்துல் காதர் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.