அது ஒரு விளையாட்டு.
ஆதிகாலத்து அரூப வேட்டையின் அரைகுறை நீட்சி.
எங்கு எப்போது தொடங்கும் முடியும் என தெரியாது.
கண்களோடு கண்கள் கோர்க்கப்படும் போது
அங்கு கவிழ்கிறது ஒரு பேரமைதி.
ஒரு கணம் தான் எனினும்
அது ஒரு சலனமற்ற அகண்ட நீர்ப்பரப்பு.
முதல் கல் விழுவதற்கு முன் வென்றாக வேண்டும்.
Leave a Reply to santhanamoorthy Cancel reply