இருளின் ஊடாக குருதி மழையில்
நனைந்து கிடக்கிறோம்
நாங்கள் இருவரும்.
அவள் இதழோரம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது
அவளால் கொல்லபட்டவனின் இரத்தம்.
செந்நீரின் சுவைக்காக ஏங்கி கிடக்கிறேன்
நான்.
நிலவை இழந்த வானத்தில்
அவ்வபோது மின்னி மறைகிறது
ஒற்றை வெள்ளை கோடு.
கோட்டானின் கதைத்தலும்
வௌவால்களின் இறைச்சலும் தூரத்தில்.
பிணங்களின் கனவுகள்
மேகங்களாய் மேலெழுந்து
பாழடைந்த மாளிகையின் சுவர்களில் அப்பி
சிதைவுகளில் கொஞ்சம் தப்பி போகிறது.
ஜன்னல், கதவுகளில் மரச்சட்டங்கள்
சடசடவென உடைகின்றன.
இறக்கைகளை அடித்தபடி
யாரோ பறந்து போகிறார்கள்
கீழ்வானத்தை நோக்கி.
அவள் கண்களில் காதல் பொங்க
என்னை பார்க்கிறாள்.
பின்னிரவு பனியில் உறைய தொடங்குகிறோம்.
பிறகு
ஞாயிறு எங்களை மனிதர்களாக மாற்றியது.
Leave a Reply to Sai Ram Cancel reply