பழிக்கு பழி!
என்னை தாக்குவது அவனது ஒரே நோக்கமாக இருக்கிறது.
நாளுக்கு நாள் அது அதிகரித்தபடியே இருக்கிறது.
அவனது கண்கள் நெருப்பினை உமிழ்வதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
உடல்தசைகள் அசுர முறுக்கில் இருப்பதாக பேச்சு.
அவனது நடை நிதானமாக மாறுவது இன்னும் பயமுறுத்துகிறது.
இரத்த வாடையுடன் சுற்றும் அவனிடம் இருந்து நான் எங்கு ஓடினாலும் தப்ப முடியாது.
நான் கடக்கும் அனைத்து தெருக்களிலும் அவனது தடம் இருக்கிறது.
கனவுகளிலும் மிருக கர்ஜனையுடன் துரத்துகிறான்.
பயத்தையும் வலியையும் பல முறை கற்பனையில் உண்டு முடித்த பிறகு
அது எப்போது நிகழும் என்று
நானும் காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நிழல் தோன்றும் போதும்.
நல்லாவே இருக்கு, என்ன குறைன்னு கேட்டு சரி பண்ணிடுங்க சாய் :)பழிக்கு வழி
🙂