தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்!
ஒவ்வொரு வீட்டிற்கு வெளியேயும் தொங்குகின்றன தொய்ந்து நைந்து போன முகமூடி!
வீட்டிற்குள் வந்ததும்
அவரவர் கண்ணாடியில் பார்த்து கொள்கிறார்கள்
முகமூடி கழற்றபட்ட தங்கள் முகங்களை.
முகமூடியை கழற்றியும்
முகத்தில் தெரியவில்லை முகம்.
சிலர் மட்டும் கழுவி கொண்டே இருக்கிறார்கள் முகத்தை!
Leave a Reply to Sai Ram Cancel reply