இருபது வருடங்கள் கழித்து ஒரு சந்திப்பு

இலையுதிர் காலம் போல நீ.
காற்றில் படபடக்கும் இலைகளாய் தொய்ந்த குரல்.
கண்களில் குழப்பம்.
பேச்சில் முணுமுணுப்பின் ஆதிக்கம்.
சம்பந்தமில்லாத அழுகை.
புரியாத சிரிப்பு.
தள்ளாமையை மறைக்க முயலாத வெகுளித்தனம் புதுசு.

பொங்கிய பழைய நினைவுகள்
பழுப்பேறிய காகிதங்களாய்.
கனமாய் இருக்கிறது யதார்த்தம்.

அந்த நீண்ட பிரிவிற்கு பின்
நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்.


Comments
3 responses to “இருபது வருடங்கள் கழித்து ஒரு சந்திப்பு”
  1. ♠ யெஸ்.பாலபாரதி ♠ Avatar
    ♠ யெஸ்.பாலபாரதி ♠

    தல.. அப்படியே இந்த கவிதையைக் கொஞ்சம் பாருங்கள்.. http://balabharathi.blogspot.com/2006/09/3.html:))

  2. பாலபாரதி அந்த கவிதை நன்றாக இருந்தது. வார்த்தைகள் கச்சிதமாக பயன்படுத்தபட்டு இருந்தன. (ஆனால் மறுமொழி எழுத ஏன் அனுமதி மறுக்கபடுகிறது?)ஏற்கெனவே நான் நினைத்திருந்த ஒரு திருத்தத்தை என் கவிதையின் கடைசி அடிக்கு முன்னால் செய்திருக்கிறேன்.<<<>அந்த நீண்ட பிரிவிற்கு பின்<>நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்>>

  3. நட்புடன் ஜமால் Avatar
    நட்புடன் ஜமால்

    \\அந்த நீண்ட பிரிவிற்கு பின்நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்.\\தெளிவாய் தெரிகிறது ஆதங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.