மது வாடையடிக்கும் மாலை பொழுதில்
வானத்தில் பூசப்பட்ட வண்ணங்களை கொண்டு
கற்பனை செய்கிறேன்
பல ஓவியங்களை.
போலீஸ்காரர்களின் பூட்ஸ் ஓலிகள்
ஓவியத்தை கலைத்து செல்கின்றன.
எங்கிருந்தோ இருள் உதிப்பதற்குள்
கலைக்கபட்ட ஓவியங்களை
நான் சீராக்கி
வார்த்தைகளுக்குள் சேமிக்க வேண்டும்.
என் மொழியில் சேமித்தவற்றை
அவரவர் மொழியில் உண்ணும் போது
இன்னும் பூக்கலாம்
உன்னத தருணங்கள்.
Leave a Reply to Anonymous Cancel reply