இருளை தவிர வேறு பொருளில்லை.
என் குரலை தவிர வேறு ஓலியில்லை.
தோல் எல்லாம் சொரசொரப்பாய் உதிர்கிறது.
தரையெங்கும் என் தலைமுடிகள் பரவி கிடக்கின்றன.
காலும் கையும் ஒரே பணியை தான் செய்கின்றன.
இந்த நான்கு சுவர்களை தாண்டி உலகம் அழிந்து போயிருக்கக்கூடும்.
பஞ்சு மேகங்களாய் கடந்த கால நினைவுகள்
தெளிவில்லாமல் அவ்வபோது கனவில் தோன்றும்.
என் பழைய மொழியில் உறுமல் மட்டுமே நினைவில் இருக்கிறது.
சமீபத்தில் தான் கற்று கொண்டேன்,
இந்த அறையில் என்னோடு வசிக்கும்
சிறுசிறு உயிரினங்களின் மொழியை.
சிந்திக்க மறந்தேன்.
அதனால் வாழ்கிறேன்.
Leave a Reply to Clemencia Azzarito Cancel reply