மனமும் நிஜமும்

வெறுமையின் சூடு பரவி கொண்டிருக்கிறது.

கண்களுக்கு எட்டிய தூரம் பாலைவனம்.

தூசு காற்று அலை அலையாய் படையெடுக்கிறது.

சூரியன் கூட வெப்பம் தாங்காமல் மஞ்சளாக மாறி விட்டான்.

மணல்வெளி மணலாலே முழுங்கபடலாம்.

மனம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது தாகம்.

நைந்து போன உடைகள் இன்னும் கிழிந்து தொங்குகின்றன.

எலும்புகள் கெஞ்சுகின்றன.

திருவல்லிகேணி சாந்தாராம் மேன்சன்.

ரூம் எண் 18யை யாரோ தட்டுகிறார்கள்.

ஒரு கணம் பாலை எண்ணங்களிலிருந்து விடுதலை.


Comments
2 responses to “மனமும் நிஜமும்”
  1. தமிழ்நதி Avatar
    தமிழ்நதி

    இந்தக் கவிதை எனது கடைசிக் கவிதையை நினைவுபடுத்துகிறது..கோடை எல்லோருக்கும் ஒன்றுதானோ…எப்படித் தவறவிட்டேன் உங்கள் வலைப்பூவை? இன்று வாசிப்பில் ஒரு பெயர் சேர்ந்தது.

  2. Sai Ram Avatar
    Sai Ram

    உங்கள் மறுமொழிக்கு நன்றி தமிழ்நதி. உங்கள் வெயிலை பற்றிய கவிதையை வாசித்தேன். நன்றாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.