கொலையாளியை கூட்ட நெரிசலில் அவர்கள் அழைத்து போகும் போது
எங்கள் இருவர் கண்களும் ஒரு கணம் சந்தித்து கொண்டன.
அவனது கண்களுக்குள் அமைதி மட்டுமே இருந்தது.
என் கண்களில் படபடப்பை பார்த்திருப்பான்.
அவனது கண்களில் அமைதியை தவிர
வேறு என்ன இருந்திருக்க வேண்டும்?
என்ன எதிர்பார்த்தேன்?
கூட்டத்தின் வியர்வை வாசத்தில்,
புரியாத பாஷை கூச்சல்களில்
யார் செவிக்கும் கேட்காத வசனங்கள்
காற்றில் மிதந்து செல்வதை பார்த்தேன்.
“கிராமத்திலே அழகான பெண்
தினமும் தனியா அந்த பக்கம் போறதை
கவனிச்சிட்டே இருந்திருக்கிறான்.”
“கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு.”
காற்றில் மிதந்து சென்ற வசனங்களை
நான் முழுமையாய் வாசிக்கும் முன்
அவை கலைந்து போயின.
கலைந்த வேகத்தில் புகையாய்
நேற்று நான் பார்த்த
வேறொரு யுவதியின் முகத்தை வரைந்து காட்டியது.
அழகு.
அதனை கச்சிதமாய் திருத்தமாய் பயன்படுத்தி
பார்ப்போரை வசியம் செய்யும் தோற்றத்துடன்
முகத்தில் புன்முறுவல் பூசியிருந்தாள்
அந்த இளம் பெண்.
புகை ஓவியத்தை என் பயத்தால் கலைத்தேன்.… …மேலும் வாசிக்க