sairams
sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • சிறுகதைகள்
    • மனிதர்கள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
  • அறிமுகம்
Browse: Home » கவிதைகள்

மனநல காப்பகத்தில் இருந்து – 1

December 3, 2023 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்
வானம் என்பது கற்பிதம்!
என் ஜன்னலில் இருந்து தெரியும் மற்றொரு சாளரம்!
சாளரத்தில் காணும் அரைகுறை அண்டம்!
அண்ட வாயுகளின் மண்டலம்!
நீளம் குறைந்த நீலம்!
தொலைவுகள் தொலைந்திட்ட தூரம்!
ஓளிகளின் நாட்டியம்!
இறந்த காலத்தின் ஓவியம்!
வண்ணங்களின் முடிவுறா சித்திரம்!
இருண்மையின் கோலம்!
நேரத்தினைச் சுட்டும் கடிகாரம்!
காலங்களைத் தீட்டும்
உருவமில்லாத உருவம்!
நீளமும் அகலமும் ஆழமும் உறைந்திட்ட
மறை ஆற்றலின் வீரியம்!
மாயைகளிலிருந்து விடுவிக்கும் கைவல்யம்!
...தொடர்ந்து வாசிக்க ...

மூட்டை மூட்டையாய் வார்த்தைகள்

October 5, 2023 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

மர நிழல் போர்த்திய சாலையில்
தினமும்
மூட்டை மூட்டையாய் வார்த்தைகளை நிரப்பி
தனியாளாய் இழுத்து வருகிறேன்.
பூட்டப்பட்ட கதவு திறந்ததே இல்லை.
உன் வீட்டருகே
மலை போல வளர்ந்து விட்டன
நான் தினமும் விட்டுச் செல்லும்
மூட்டைகள்… ...தொடர்ந்து வாசிக்க ...

மரணத்திற்கு ஆயுத்தம்

October 4, 2023 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

பூச்சிகளின் இசைக்கேற்ப
காற்றினைக் கிழித்தபடி
தாளமிடும் இலைகளின் பாடலில்
எப்போதாவது சிறு சிறு துணுக்களாய்
மரணத்தின் உறுமல் கேட்பதுண்டு.
சில சமயம்
தடங்கள் பதியா வனத்தின் பரப்பில்
மரணத்தின் கால்தடம் கண்டதுண்டு.

பிறகுத்
தேய் பிறை வருடக்கணக்கில் நீண்ட ஒரு காலத்தில்
காற்றிலே நிரம்பி புயலாய் ஊளையிட்டது அது.
காடே ஸ்தம்பித்து பிறகுப் பேரரவமிட்டு அழுதது.
நிலம் எல்லாம் அதிர்ந்தது.
முதுகிலே பயத்தினைச் சுமந்தபடி
ஒளிந்து இருந்தேன் நான்
பெருமழையாய் சுழன்றடித்து வரும்
அதன் ஈரம் என்னை நனைக்கும் வரை… ...தொடர்ந்து வாசிக்க ...

தத்தளிப்பு

October 3, 2023 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

மழைக்கு ஒதுங்கியவன் மனநிலைப் போல்
கல்லில் இடித்து தண்ணீரில் தத்தளிக்கிறது
காகித கப்பல்! ...தொடர்ந்து வாசிக்க ...

நீரை உலர்த்த காத்திருக்கும் வெயில்

October 4, 2022 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

பாலைவனத்தின் நடுவே
முளைத்து எழுந்து
தலைக் குனிந்து நிற்கிறது
குடிநீர் குழாய் ஒன்று.

குழாயிலிருந்து துளிர்த்து நிற்கும்
நீர் சொட்டு ஒன்று
பல்கி
சூரிய ஒளியில் பிரகாசித்து
கீழே விழ காத்திருக்கிறது.

மணல்வெளியில்
நீர் விழும் தருணத்தில்
அதனை உலர்த்த காத்திருக்கிறது
வெயில்… ...தொடர்ந்து வாசிக்க ...

பிரபஞ்சத்தில் நான்

April 10, 2022 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

பிரபஞ்ச பெருங்கடலில்
சிறு துளி நான்!
பிரபஞ்ச சிறு துளியில்
பெருங்கடல் நான்!… ...தொடர்ந்து வாசிக்க ...

குவாண்டம் தற்கொலை

August 10, 2021 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

அறைக்குள் தற்கொலைக்கு முயல்கிறேன்.
நீ கதவு திறக்கும் வரை
உயிரோடு இருப்பேன்.
திறக்காவிடில்
நான் சிரஞ்சீவி… ...தொடர்ந்து வாசிக்க ...

சாலை

June 8, 2021 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

வளைந்து வளைந்து சென்றாலும்
எல்லா சாலைகளும்
நேர் கோட்டில் பயணிப்பவையே!… ...தொடர்ந்து வாசிக்க ...

புரியாது

May 18, 2021 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

என் கவிதை புரியவில்லை என
தொலைபேசியிடும் நண்பர்களே
உங்களையும்
என்னால் புரிந்து கொள்ள முடிந்தது இல்லையென என்றாவது
நான் புகார் சொன்னது உண்டா? ...தொடர்ந்து வாசிக்க ...

ஓரினமாதல்

March 20, 2021 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

என்றோ ஒரு நாள்
யாரோ ஒருவர்
மரத்தின் மீது எறிந்துச் சென்ற
கருநீல நெடிய வயர் ஒன்று
மரத்தோடுப் பிணைந்து
தண்டோடுச் சுற்றி
பட்டைகளோடுக் கலந்து
பழுப்பாகி போனது.

இளவேனில்காலத்தின் தொடக்க நாளொன்றில்
அந்த வயரினுள் இருந்து
முளைத்தது
ஓர் இலை… ...தொடர்ந்து வாசிக்க ...

1 2 … 16 Next →

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

என் நூல்

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Copyright © 2023 sairams Owned by Sairam Sivakumar.

Powered by WordPress. Theme: Origin. Hosted by Milkhost.