எனக்கு தெரிந்து பலர் இந்த ஜுன் 6-யன்று தங்களது மறந்து போன பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இது அறியாமையா?
Author: சாய்ராம் சிவகுமார்
-
“எங்களுக்கு எல்லா அரசியல்வாதிகளோட, நடிகர்களோட பிறந்த நாள் நல்லா நினைவிருக்கு. மறக்காம அன்னிக்கு ஏரியாவுல எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்து கொண்டாடுவோம். ஆனா எங்க பிறந்த நாள் எங்களுக்கு தெரியாது.”இது ஒரு தமிழ் படத்துல கேட்ட வசனம். தமிழக சமூகங்கள் பலவற்றிற்கு பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பதும் கொண்டாடுவதும் சமீப காலமாக வந்த பழக்கம். இதனால் தான் பள்ளிக்கூடங்களில் முதல்முறையாக தங்கள் மகன், மகள்களை சேர்க்க செல்லும் பெற்றோர் அவர்களது பிறந்த நாளை சொல்ல திணறுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் இது அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை என்பதால் இதற்கு ஒரு தீர்வு வைத்திருந்தார்கள். அது தான் கண்ணை மூடியபடி அப்படி அப்பாவியாக வந்து நிற்கும் மாணவர்களுக்கு வயது ஐந்து, பிறந்த நாள் ஜுன் 6 என குறித்து கொள்வது. இந்த தேதியே பள்ளிக்கூட காலண்டருக்கு ஏற்ற பிறந்த நாள்.… …மேலும் வாசிக்க
-
மனிதர்கள் – போதையே வாழ்க்கை
லீமா அவனுடைய பெயர். மணிப்பூரைச் சேர்ந்தவன். என்னுடன் கல்லூரியில் படித்தவன். ஒரு பெரிய செல்வந்தர் குடும்பம் அவனுடையது. தாய் சிறு வயதிலே இறந்து விட்டாள். தந்தையின் நான்காவது மனைவியின் பெயர் கூட அவனுக்கு நினைவில்லை. மணிப்பூரில் அவனிருந்த பகுதியில் தினமும் கலவரம் நடக்கும் என்பதால் தொலைதூரத்தில் அவனைப் படிக்க அனுப்பியிருக்கிறார் அவனது தந்தை. மற்றொரு காரணம், இவனது அண்ணன் அங்கிருந்த ஒரு தீவிரவாத அமைப்பில் உறுப்பினர். இரண்டாவது மகனையும் அந்த வழியில் இழக்க அவர் விரும்பவில்லை.
லீமா யாரிடமும் அதிகமாய் பேச மாட்டான். நசுங்கிய மூக்கும் அந்நிய நிறமும் சென்னையில் அவனை இன்னும் அமைதியானவனாய் மாற்றி விட்டது. கல்லூரியில் சேர்ந்த ஓரிரு மாதங்களில் வேறு கல்லூரிகளில் படிக்கும் மணிப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் அவனுக்கு நட்பானார்கள். அவனைச் சந்திக்க அடிக்கடி வர தொடங்கினார்கள். கஞ்சாவும் சிகரெட்டும் மதுவும் தினசரி பழக்கங்களாயின.
லீமாவிற்கு போதையின் மீது மிகுந்த ஆர்வமிருந்தது. அவன் வீட்டிலிருந்து மாதமாதம் சிகரெட் பொடியும், சிகரெட் பேப்பரும் பார்சலில் வரும்.… …மேலும் வாசிக்க
-
மனிதர்கள் – பிரம்பு டீச்சரம்மா
நான் பள்ளியில் இருந்த போது பிரம்பிற்குப் பேர் பெற்ற ஒரு டீச்சரம்மா இருந்தார்கள். அவரைக் கண்டாலே மாணவர்கள் நடுங்குவார்கள். ஐந்தாம் வகுப்பு வரை இருந்த ஒரு கிருஸ்துவ பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தாம் மூத்தவர்கள். அவர்களின் வகுப்பு ஆசிரியை தான் நம்ம பிரம்பு டீச்சரம்மா.
நான்காம் வகுப்பில் இருக்கும் போதே அடுத்த வருடம் பிரம்பு டீச்சரம்மாவிடம் பிரம்படி வாங்க வேண்டுமே என எல்லாரும் பயந்து போய் இருந்தோம். தினமும் காலை பள்ளி மைதானத்தில் வெயிலில் முட்டி போடும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்; ஐந்தாம் வகுப்பு அறையிலிருந்து கேட்கும் அலறல் சத்தங்கள் என தினமும் எங்கள் திகில் அதிகரித்தபடி இருந்தது. அடுத்த வருடம் நான் வேறு பள்ளிக்குப் போய் விடுவேன் என ஒருவருக்கொருவர் சொல்லி எங்களை நாங்களே ஆறுதல்படுத்தி கொள்வோம். ஆனால் எங்களது பெற்றோர்கள் யாரும் எங்களது பயத்தினைப் பொருட்படுத்தவேவில்லை.
நாங்கள் ஐந்தாம் வகுப்பிற்குப் புலம் பெயரும் நாளும் வந்தது. முதலிரண்டு நாட்கள் அமைதியாக போயின.… …மேலும் வாசிக்க
-
காதலிக்காக காத்திருக்கும் போது நடந்த விபத்து
தூரத்தில் காதலியின் உருவம் தோன்றும் போது
காத்திருத்தலின் சுவை குன்றி,
கண்களின் தேடுதல் மங்கி
இரு கால்களிடையே தலையை கொடுத்து
அழுது கொண்டிருந்தேன் நான்.ஆறுதல் வார்த்தைகளோ
அன்பு அரவணைப்போ எதிர்பார்க்கவில்லை.
போய் விடு.எனக்கான துக்கத்தை
நான் தான் உண்ண வேண்டும்.
-
மனிதர்கள் – பாலைநிலத்து நிருபர்கள்
அவருக்கு 35 வயதிருக்கலாம். ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் வரும் கமல் போல தோற்றம். முகத்தில் எப்போதும் ஓர் இறுக்கம் இருந்தது. கண்களினுள் மறைந்திருந்த கோபத்தைத் தாண்டி ஒரு கவர்ச்சி இருந்தது. அவர் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல நாளிதழின் மாவட்ட பிரிவிற்கு உதவி ஆசிரியர்.
உதவி ஆசிரியரின் ஊர் ஒரு மாவட்டத்தின் தலைநகரம். ஆனால் அதற்கான எந்த லட்சணங்களும் இல்லாத ஊர். டெல்லியிலிருந்து மூன்று மணி நேர பயணத் தூரத்தில் இருக்கிறது. இந்திய தலைநகரத்திற்கு அருகாமையில் இருந்தாலும் இங்கே பெரும்பாலான சமயம் மின்சாரம் இருக்காது. மாவட்டத்தில் இருக்கும் பல கிராமங்களுக்கு இன்னும் மின்சார வசதியே ஏற்படுத்தி தரப்படவில்லை. சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக பயணிகளை மசாஜ் செய்யும் ஆற்றலை பெற்றிருக்கின்றன. பஸ் வசதி இல்லாததால் ஒரு ஜீப்பில் இருபது பேருக்கு மேற்பட்டவர்கள் தொங்கி கொண்டும் நசுங்கி கொண்டும் பயணிப்பது தினசரி காட்சி.
ஜனவரி மாதத்தின் குளிர். உடலை நடுநடுங்க வைக்கும் பனி.… …மேலும் வாசிக்க
-
சபரிமலை மகரவிளக்கு மனிதர்களால் உருவாக்கபடுகிறது என ஒப்பு கொண்டது தேவஸ்தானம்
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பக்தர்களின் பார்வைக்கு காண கிடைக்கிறது மகரவிளக்கு. கோயில் பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் வனத்தில் ஓர் ஓளி தோன்றுகிறது. சில நிமிடங்களே தோன்றும் இந்த ஒளியினை மகரவிளக்கு என மிக புனிதமாக பக்தர்கள் கருதி வருகிறார்கள். இந்த ஒளியை பார்க்க மிக பெரிய கூட்டம் திரள்வதுண்டு. 1999ம் ஆண்டு மகரவிளக்கை பார்க்க கூடிய பெருங்கூட்டத்தில் நெரிசல் உண்டாகி விபத்தில் 53 பக்தர்கள் பரிதாபமாய் இறந்து போனார்கள்.சபரிமலை மகரவிளக்கை பற்றி பல காலமாகவே முற்போக்குவாதிகள் கேள்வி எழுப்பியபடி இருக்கிறார்கள். தானாக உருவாகுவதாக அல்லது கடவுளின் அருளால் உருவாகுவதாக பக்தர்கள் நம்பும் இந்த ஓளி உண்மையில் மனிதர்களால் உருவாக்கபட்டதே என பல ஆண்டுகளாக பலர் சொல்லியும் அதை பக்தர்கள் நம்பவில்லை. மகரவிளக்கினை காண வரும் கூட்டம் குறையவுமில்லை. பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதன்மூலம் தனது வருமானத்தை உயர்த்தி கொள்ள சபரிமலை தேவஸ்தானம் இத்தகைய ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.… …மேலும் வாசிக்க
-

பேய் வீடு – பாலபாரதியின் கதைக்கு என் மறுமொழி கதை
… …மேலும் வாசிக்கபேய், திகில், அமானுஷ்யம், திரில்லர் என்கிற மூடில் கதை வாசிக்க நினைப்பவர்கள் தயவு செய்து இந்த கதையை வாசிக்க வேண்டாம்.
நண்பர் யெஸ்.பாலபாரதி தன்னுடைய விடுபட்டவை வலைத்தளத்தில் பேய் வீடு என ஒரு சிறுகதையை பதித்திருக்கிறார். அதனை படித்தவுடன் எனக்குள் ஏதோ ஓர் உத்வேகம். அதே கதையை நான் மளமளவென எனது நடையில் தட்டச்சு செய்ய ஆரம்பித்து விட்டேன். இன்னொருத்தர் கதையை இப்படி உரிமை கொண்டாடுவது தவறு தான். என்றாலும் கதை என் மீது செலுத்திய தாக்கமே இதற்கு காரணம்.
இப்போது என் கதையை படிக்கும் போது பாலபாரதியின் கதைத்தலே சிறப்பாக இருக்கிறது என்றும், நான் தேவையில்லாமல் அதனை பாடுபடுத்திவிட்டேன் என்றும் தோன்றுகிறது. என்றாலும் எது சரி, எது தவறு, காரணம் என்ன போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கதையை பதிக்க அனுமதி அளித்த நண்பர் யெஸ்.பாலபாரதிக்கு நன்றி. இந்த கதையை படிப்பதற்கு முன் வாசகர்கள் அவரது பேய் வீடுகதையை படித்துவிடுதல் வாசிப்பனுபவத்திற்கு உகந்ததாக இருக்கும்.
-
கரிய வெயிலாய் இருட்டு
கரிய வெயிலாய் இருட்டு
துளிதுளியாய் வியர்வையை உறிஞ்ச,
குரல் நூறு குரலாய் எதிரொலிக்கும்
முடிவில்லா குகையினுள் தனியே நின்று கொண்டிருப்பது
பயமாக இருக்கிறது.கால்கள் சோம்பினாலும்
பயம் முன்னால் இழுத்து செல்கிறது.
இங்கு வெறுமையை தவிர வேறு எதுவும் இல்லையா?மனம் தன் அனல்வெறுமையில்
ஆயிரம் ஆவிகள் என்னை சூழ்ந்து நிற்பதை பார்க்கிறது.
பிரகாசிக்கும் வெண் பற்கள்.
அதன் மேலே இரத்த கறை.
இரத்த கறையினுள் பூத்திருக்கிருக்கின்றன புழுக்கள்.ஆயிரம் ஆவிகளும் முறைத்திருக்க,
அந்த முறைப்பு முதுகெலும்பில் சில்லிட்டு இருக்க,
செயலிழந்த கால்களை இழுத்தபடி
தாகத்தில் நாவறண்டு ஓடுகிறேன்
முடிவில்லா குகையினுள்.இரத்த கறையில் கரைந்து போன முன்னோர்களுக்கு தெரியாது
குகைக்கு வெளியே உதிர பசியோடு காத்திருக்கிறது
வெள்ளை இருட்டாய் வெளிச்சம்.
-
தலைப்பு செய்தியை தீர்மானிப்பது யார்?
ஒரு காலத்தில் எல்லா பேப்பர்களிலும் ஆட்டோ சங்கர் பற்றிய தகவல்களாய் இருந்தது. பிறகு வீரப்பன். ஹர்ஷத் மேத்தா, சிவகாசி ஜெயலட்சமி, டாக்டர் பிரகாஷ் என ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு செய்தி பிரதானமாய் ஊடகங்களில் அடிபடும். பிறகு நிறைய செய்தி தொலைக்காட்சி சானல்கள், பரபரப்பு பத்திரிக்கைகள் தோன்றின. ஊடகங்கள் மத்தியில் வளரும் போட்டி மனப்பான்மை காரணத்தால் இன்று பெரிய செய்திகளுக்கு தட்டுபாடு நிலவுகிறது. ஒரு ‘சத்துள்ள’ செய்தி கிடைத்த வேகத்தில் முழுமையாக சக்கையாகபட்டு மிக விரைவில் காலவதி ஆகிவிடுகிறது.இன்று செய்தி அறையை போர்களம் போல வர்ணிக்கிறார்கள். மக்களுக்கு உண்மையில் தேவையான செய்தியை தான் இன்றைய பத்திரிக்கைகள் செய்தியாய் வடிவெடுக்கின்றனவா என்கிற கேள்விக்கு உள்ளே இந்த கட்டுரை போக போவதில்லை. நோம் சாம்ஸ்கி சிந்தனைகள் இன்று ஊடகத்துறை மாணவர்களுக்கும் தெரியும். பிரபல ஊடகம் என்பது ஒரு வணிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இந்த கட்டுரையின் நோக்கம், ‘ஒரு செய்தியை பிரபலமாக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது?’… …மேலும் வாசிக்க
-
மொட்டை மாடியில் உலாவுபவர்கள்
மொட்டை மாடியில் தொடர்ந்து உலாவுபவர்களை
சாதாரணமாய் வெளியிடங்களில் இனம் காண முடியாது.
நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களும்
இருபது வயதிற்கு உட்பட்டவர்களுமே அதிகம்.கிராமத்தில் தனது வீடு மட்டுமே காங்கிரீட் வீடு என்கிற
அகங்காரத்தின் காரணத்தினால்
தன் மொட்டை மாடியில் உலா வந்த சிறுவன் பாண்டி.
இளைஞன் ஆன பின் கல்லூரி ஹாஸ்டலிலே
மொட்டை மாடியில் தான் அரட்டை கச்சேரி
விடிய விடிய அரங்கேறும்.
திருமணத்திற்கு பிறகு
அறியா நகரத்தின் பற்கள் கொடுத்த காயத்தை போக்க
மனதை லேசாக்க மொட்டை மாடியில் அமர்ந்து
கண்ணுக்கெட்டிய தூரம் மனிதர்களும் கட்டிடங்களுமாய் தெரியும்
நகரத்தை பார்வையால் வெறித்திருப்பான்.மனைவியின் மரணத்திற்கு பின்பு
மகனுக்கும் மருமகளுக்கும் கூடுதல் சுமையாய்
தன்னை கருதி வாழும் பாண்டிக்கு
இருப்பதெல்லாம் ஒரு பிரச்சனை.
அவர்கள் அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் மொட்டை மாடியில் யாருக்கும் அனுமதியில்லை.
இறந்து போனான் விரைவில்.சொர்ணம்மாளுக்கு மொட்டை மாடியில் தான்
தன் முதிய வயது ஒத்த தோழிகள் உண்டு.
மருமகளை பற்றி பேச பேச குறையாமல் இருக்கும் புகார்கள்.… …மேலும் வாசிக்க



