Author: சாய்ராம் சிவகுமார்

  • பைக்கின் உறுமல் ஒலியை காற்றில் மிதக்க விட்டு
    அவன் என்னிடமிருந்து விடை பெற்று சென்று
    சில கணங்கள் தாம் கடந்திருக்கும்.

    கத்தியை கூர் தீட்டுவது போல ஒரு சத்தம்.
    அவன் சென்ற திசையில்
    யாரோ பைக்கிலிருந்து தூக்கியெறியபடுவதை பார்த்தேன்.
    அதற்கு பிறகு நான் திரும்பவே இல்லை.
    எதிர் திசையில் நடந்து கொண்டே இருந்தேன்.

    முதிர் மாலை நேரத்து இருள்.
    யார் என தெளிவில்லை.
    அவனாக இருக்குமோ?

    துப்பட்டாவை இழுத்து போர்த்தி
    வீட்டை நோக்கி நடந்தேன்.
    ஏற்கெனவே தாமதமாகி விட்டது.
    தந்தை திட்டுவார்.

    விபத்தின் தாக்கம் ஓர் அலை போல என்னை கடந்து சென்றது.
    சிலர் அந்த பக்கம் ஓடினார்கள்.
    சிலர் வெறித்தபடி பார்த்து கொண்டிருந்தார்கள்.

    அவனாக இருக்காது.
    வேறு யாரோ.
    யாரோ ஒரு குடிகாரன்.

    அவனாக இருந்தால் அவனுக்கு இப்போது உதவி தேவைபடும் அல்லவா?
    அவனுக்கு விபத்து நேர்ந்ததை நான் பார்த்தேன் என யாருக்குமே தெரியாது.
    அவனுக்கே தெரியாது.

    இயந்திரங்களின் பிடியில் சிக்கிய பிரதான வீதிக்கு வந்த போது
    அந்த விபத்து நடந்ததற்கான அறிகுறியே இல்லை.…மேலும் வாசிக்க


  • கொலையாளியை கூட்ட நெரிசலில் அவர்கள் அழைத்து போகும் போது
    எங்கள் இருவர் கண்களும் ஒரு கணம் சந்தித்து கொண்டன.
    அவனது கண்களுக்குள் அமைதி மட்டுமே இருந்தது.
    என் கண்களில் படபடப்பை பார்த்திருப்பான்.

    அவனது கண்களில் அமைதியை தவிர
    வேறு என்ன இருந்திருக்க வேண்டும்?
    என்ன எதிர்பார்த்தேன்?

    கூட்டத்தின் வியர்வை வாசத்தில்,
    புரியாத பாஷை கூச்சல்களில்
    யார் செவிக்கும் கேட்காத வசனங்கள்
    காற்றில் மிதந்து செல்வதை பார்த்தேன்.

    “கிராமத்திலே அழகான பெண்
    தினமும் தனியா அந்த பக்கம் போறதை
    கவனிச்சிட்டே இருந்திருக்கிறான்.”

    “கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு.”

    காற்றில் மிதந்து சென்ற வசனங்களை
    நான் முழுமையாய் வாசிக்கும் முன்
    அவை கலைந்து போயின.
    கலைந்த வேகத்தில் புகையாய்
    நேற்று நான் பார்த்த
    வேறொரு யுவதியின் முகத்தை வரைந்து காட்டியது.

    அழகு.
    அதனை கச்சிதமாய் திருத்தமாய் பயன்படுத்தி
    பார்ப்போரை வசியம் செய்யும் தோற்றத்துடன்
    முகத்தில் புன்முறுவல் பூசியிருந்தாள்
    அந்த இளம் பெண்.

    புகை ஓவியத்தை என் பயத்தால் கலைத்தேன்.…மேலும் வாசிக்க


  • பல வருடங்கள் கழித்து அன்று கல்லூரி நண்பன் ஒருவனைப் பார்த்தேன். தன் புது ஹோண்டா காரில் வந்திருந்தான். பரஸ்பர நலம் விசாரித்தல், பிறகு நண்பர்களைப் பற்றி புரணி பேசுதல் என உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நல்ல ஏசி பாருக்கு மது அருந்த அழைத்து சென்றான்.

    தொடர்ந்து இரண்டு மணி நேரம் உரையாடி விட்டு அடுத்து பேச என்ன என தெரியாமல் ஓர் அமைதி நிலவியது. பாரில் ஓர் ஓரத்தில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த டீவியில் ஓடிக் கொண்டிருந்த கிரிக்கெட் மேட்ச்சை இருவரும் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தோம். மது அருந்தும் போது பேச்சு ஒரு கூடுதல் போதையூட்டி. அதனால் நண்பன் மீண்டும் பேச தொடங்கினான்.

    “உனக்கு பாண்டியன் நினைவிருக்கா?” என நண்பன் டீவி திரையில் இருந்து கண்களை அகற்றாமல் கேட்டான். நான் பதில் பேசுவதற்குள் அவனே மீண்டும் பேச தொடங்கினான்.

    “பாண்டியனைக் பட்டிக்காட்டான், பட்டிக்காட்டான்னு நாம எல்லாரும் கிண்டல் பண்ணோம் நினைவிருக்கா.”

    கல்லூரி காலத்தில் எங்களுக்கு ஒரு வருட ஜுனியர் இந்த பாண்டியன்.… …மேலும் வாசிக்க


  • அரக்கோணம் போகும் வழியில் ரெயில் ஜன்னல் வழியாக நீங்கள் அந்த நகரங்களை பார்ப்பீர்கள். லட்சுமி நகர், பிரதாப் நகர் என ஒவ்வொரு காலனிக்கும் பெயர் பலகைகள் பளிச்சென வைக்கபட்டிருக்கும். அதோடு நகர் அனெக்ஸ் என கூடுதல் காலனிகளுக்கும் பெயர் பலகைகளையும் வாசிக்க முடியும். அதோடு இந்த காலனிகளுக்கு போகும் பாதையில் வழிகாட்டி பலகைகள் வைக்கபட்டிருக்கின்றன.

    ஒரு வித்தியாசமுண்டு. இந்த நகரங்களில் பெயர் பலகைகள் மட்டும் தான் இருக்கும். எல்லாம் காலி நிலங்கள். எல்லை கோடுகளை வலியுறுத்தும் கற்களை தவிர புல் புளைத்த நிலப்பரப்பு. ஏன் காலி நிலங்களில் இவ்வளவு பளிச்சென பெயர் பலகைகள்? காரணமுண்டு. இன்று அதிக அளவில் பணம் புழங்கும் நில வியாபாரத்தினால் உண்டான மனிதர்களற்ற நகரங்கள் இவை.

    “தாம்பரத்துல எங்க அப்பாவுக்கு ஒரு நிலம் இருந்துச்சு. இருபது வருஷத்துக்கு முன்னால அவ்வளவு தொலைவில நிலம் வைச்சு என்ன பண்றதுன்னு சொல்லி அந்த நிலத்தை இருபதாயிரத்துக்கு விற்றோம். இன்னிக்கு அந்த நிலத்தோட மதிப்பு என்னன்னு தெரியுமா?… …மேலும் வாசிக்க


  • ஒரு சினிமா படப்பிடிப்பு தளம். வழக்கம் போல எல்லாரும் பிசியாக இருக்கிறார்கள். ஓர் ஓரத்தில் சிவா நின்று கொண்டிருக்கிறான். நான்கு நாள் தாடி. மெலிந்த உருவம். ஒரு கோணத்தில் அந்தச் சினிமா டைரக்டரைப் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது போலவே இருக்கிறது. டைரக்டரின் கடைக்கண் பார்வைக்காக தான் சிவா நின்று கொண்டிருக்கிறான். அவரும் தினமும் அவனைப் பார்க்கிறார். பார்க்கிறார் என்பதை விட அவரது பார்வை அவனிருக்கும் திசையில் கடந்து போகும். அவன் எழுந்து பணிந்து ஒரு வணக்கம் வைப்பான். அதை அவர் பொருட்படுத்தவே மாட்டார். யாருமில்லாத சுவற்றைப் பார்த்தது போல அவரது ரியாக்ஷன் இருக்கும்.

    அவன் நேற்று மதியம் கடைசியாக சாப்பிட்டது. பசியில் வயிறு எரிகிறது. தலை சுற்றல் வேறு.

    சிவாவிற்கு சேலம் பக்கத்தில் ஒரு கிராமம் தான் சொந்த ஊர். சிறு வயதில் படிப்பு ஏறாமல் ஊர் சுற்றி கொண்டிருந்தான். அவனது கிராமத்தில் பரோட்டா கடை நடத்தும் தனசேகர் அவனுக்கு ஒரு வகையில் தூரத்து சொந்தம்.… …மேலும் வாசிக்க


  • அவரது பெயர் சீனிவாசன். சீனா என்று சொன்னால் தான் பலருக்கு அவரைத் தெரியும். திரைக்கதை எழுதுவதில் திறமைசாலி. பல நிறுவனங்களில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கபட்டன. முழு திறமையையும் காட்ட வேண்டிய காலகட்டத்தில் திடீரென மனநிலை பிறழ்ந்து பைத்தியமாகி போனார்.

    சீனா வட சென்னையில் ஒரு மனநல காப்பகத்தில் இருந்த போது தான் நான் அவரை முதன்முதலாக சந்தித்தேன். நண்பர்களுடன் வேறொரு பணிக்காக நாங்கள் அந்த மனநல காப்பகத்திற்கு சென்றிருந்தோம். அங்கே போகும் வழியில் நண்பர்கள் சீனாவைப் பற்றி தான் பேசி கொண்டு வந்தார்கள். அதனால் அவர் எப்படியிருப்பார் என்பது பற்றிய என் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

    சென்னைக்கு வெளியே ஒரு கிராமம் போன்ற இடத்தில் அந்த மனநல காப்பகம் இருந்தது. அமைதியான இடம். காப்பகத்திற்கு நிதி வசதி குறைவாக இருந்ததினால் கட்டிடங்களோ அங்கிருந்த வசதிகளோ மிக சுமாராக இருந்தது. ஆண்களுக்கான தனியார் இலவச மனநல காப்பகங்கள் சென்னையில் மிகவும் குறைவு. அந்த வகையில் அந்தக் காப்பகத்தில் வசதிகள் இல்லையெனினும் அது இருப்பதே ஒரு சேவை தான்.… …மேலும் வாசிக்க


  • மது வாடையடிக்கும் மாலை பொழுதில்
    வானத்தில் பூசப்பட்ட வண்ணங்களை கொண்டு
    கற்பனை செய்கிறேன்
    பல ஓவியங்களை.

    போலீஸ்காரர்களின் பூட்ஸ் ஓலிகள்
    ஓவியத்தை கலைத்து செல்கின்றன.

    எங்கிருந்தோ இருள் உதிப்பதற்குள்
    கலைக்கபட்ட ஓவியங்களை
    நான் சீராக்கி
    வார்த்தைகளுக்குள் சேமிக்க வேண்டும்.

    என் மொழியில் சேமித்தவற்றை
    அவரவர் மொழியில் உண்ணும் போது
    இன்னும் பூக்கலாம்
    உன்னத தருணங்கள்.


  • ஒரு காலத்தில் பாண்டிச்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ள கண் டாக்டர் தோட்டம் என்கிற பகுதி பாலியல் தொழிலுக்கும் ரவுடித்தனத்திற்கும் பேர் பெற்ற பகுதியாக இருந்தது. இங்கே சில வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். என்னுடன் பணபுரியும் பாண்டிச்சேரி நிருபர் அங்குள்ள மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். சந்துரு என்ற 20 வயது இளைஞன் எனக்கு அறிமுகமானது இப்படி தான்.

    சந்துருவின் மீது பல அடிதடி வழக்குகள், திருட்டு வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு என பல வழக்குகள் இருந்தன. அந்தப் பகுதி இளைஞர்கள் பெரும்பாலும் அடியாட்களாய் தான் இருந்தார்கள். சிறு வயதிலிருந்தே இந்தச் சூழலில் வளரும் இளைஞர்கள் மிக சிறிய வயதிலே ரவுடித்தனத்தில் ஈடுபட தொடங்கி விடுகிறார்கள். பாலியல் தொழில் தரகர்களாய் சிறுவர்கள் தான் ஈடுபடுத்தபடுகிறார்கள். பாண்டிச்சேரி பஸ் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள பார்களிலோ திரியும் வெளியூர் சபல கேஸ்களைச் சிறுவர்கள் தங்கள் ஏரியாவிற்குப் பேசி அழைத்து செல்கிறார்கள்.… …மேலும் வாசிக்க


  • நாம் வாழும் பிரபஞ்சம் எப்படி உருவானது? அதற்கு முன் என்ன இருந்தது? தொடக்கத்திற்கு முன் எதாவது இருந்ததா? ஒன்றுமில்லாத நிலையில் இருந்து பிரபஞ்சம் உருவானதா? ஒன்றுமில்லாத நிலை என்று ஒன்றுண்டா? இப்படி பல கேள்விகள் எல்லாருக்கும் உண்டு. இதற்கெல்லாம் அறிவியல் பதில் கண்டு பிடித்து விட்டதா என்றால் இல்லை. ஆனால் இப்படியாக இருக்கலாம் என சில அறிவியல் தத்துவங்கள் உண்டு. அத்தகைய அறிவியல் தத்துவங்களில் சமீப காலத்தில் புது புரட்சி ஒன்று நடந்திருக்கிறது.

    Big Bang

    பூமி சூரியனிலிருந்து உருவானது என்றும், சூரிய குடும்பங்களை போல பல நட்சத்திரங்களை உள்ளடக்கியது galaxy என்றும், இவ்வாறு பல galaxyகளை உள்ளடக்கியதே நாம் வாழும் பிரபஞ்சம் என்றும் அறிவோம். இந்த பிரபஞ்சத்திற்கு 13.7 பில்லியன் வருடங்கள் வயதாகிறது என சொல்கிறார்கள்.

    தொடக்கத்தில் பிரபஞ்சம் மிக சிறியதாக இருந்திருக்க வேண்டும். அங்கே கடும் வெப்பம் நிலவியிருக்க வேண்டும். பிறகு மெல்ல பிரபஞ்சம் விரிய தொடங்குகிறது. அதன் காரணமாய் வெப்பம் குறைய ஆரம்பிக்கிறது.… …மேலும் வாசிக்க


  • ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பணிபுரிந்த போது எனக்கு கல்யாண் என்னும் மனிதரின் அறிமுகம் கிடைத்தது. கல்யாணிற்கு 35 வயதிருக்கும். சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் அவ்வப்போது நடித்து கொண்டிருப்பவர். தவிர ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொருவிதமான வேலை செய்து பிழைத்து கொண்டிருப்பவர்.

    சில வருடங்களுக்கு முன்பு கல்யாணிற்கு ஒரு பெண் மீது காதல் பிறந்தது. அது பிறந்த இடம் தான் கொஞ்சம் வித்தியாசமானது. மும்பையில் நண்பர்களுடன் காப்ரே நடனம் பார்க்க சென்ற கல்யாணிற்கு அங்கு நடனமாடிய ஒரு தமிழ் பெண்ணைப் பார்த்தவுடன் அவள் மீது காதல் பிறந்து விட்டது. அதற்குப் பிறகு வெகு பிரயத்தனப்பட்டு அந்தப் பெண்ணின் அபிமானத்தை பெற்று, அவளது தாயிடம் நற்பெயரைப் பெற்று தன் குடும்பத்தின் எதிர்ப்பிற்கிடையே அந்தப் பெண்ணையே மணந்து கொண்டார்.

    கல்யாணிற்குத் தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு தான், தன் மனைவி ஏற்கெனவே ஓர் ஆளுடன் வாழ்ந்து கொண்டிருந்த விவரம் தெரிய வந்தது. என்றாலும் திருமணத்திற்குப் பிறகு அது போல எதுவும் நேர கூடாது என மனைவியை எச்சரித்து அவளுடனே வாழ தொடங்கினார்.… …மேலும் வாசிக்க