எனக்கும் வானத்திற்கும் இடையே
பெருமழையொன்று சுவர் கட்டிய நாளன்று
பெருந்துக்கம் சூழ்ந்தது.
பிரிவாற்றாமையால்
பெரு உண்மை உதித்தது.
குழந்தைப் போன்றே ஏங்கியிருக்கிறேன்.
வானமோ கடிகார முள்ளின் முனைப்போடு
வேறு எங்கோ பார்த்து இருந்திருக்கிறது.
இருதயத்தைக் குலைத்து போடும் ஒரு தலைக்காதலின் வலியோடு
காதை அறுத்து கொண்டேன்.

Leave a Reply