இது புதிய வலைப்பதிவு
என்னுடைய புது வலைப்பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன். ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் பிளாக்கரில் செவ்வாய்க்கிழமை கவிதைகள் என்கிற பெயரில் ஒரு வலைப்பதிவு நடத்தி கொண்டிருந்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத நினைவு அது. இப்போது எனக்கென்று இணையத்தில் சொந்த வீடு கட்டி இங்கு குடி புகுந்திருக்கிறேன். என்னுடைய பழைய பிளாக்கர் பதிவுகள் அனைத்தும் இப்போது இங்கேயே வாசிக்க கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை கவிதைகள் வாசித்து வந்த நண்பர்கள் கவலைப்பட வேண்டாம். இது அப்படியே அந்த வலைப்பதிவு தான். முகவரி மட்டும் மாறியிருக்கிறது. முன்னர் மாதத்திற்கு மூன்று நான்கு பதிவுகள் போடுவேன். இப்போது வாரத்திற்கு மூன்று பதிவாவது போட வேண்டுமென திட்டம். பார்க்கலாம் எப்படி போகிறதென…
நன்றி!
வாழ்த்துக்கள்
முதல் நபராய் வந்து வாழ்த்து சொன்னதற்கு மிக்க நன்றி குமரேசன் சார்.
அடடா, நானும் நேத்து ஒரு மறுமொழி போட்டேன். அதைக் காணலை. spam commentsல் இருக்கா பாருங்க.
@ரவி, நீங்கள் கமெண்ட் எழுதியது தற்காலிகமாக பதிக்கபட்டிருந்த போஸ்ட்டில். அந்த போஸ்ட் நீக்கபட்ட போது உங்களுடைய கமெண்ட்டும் நீக்கபட்டது. நீக்கும் போது எனக்கு அது தெரியவில்லை. பிறகு எனது இமெயிலில் உங்கள் கமெண்ட் இருந்தது. பிறகு தான் விஷயம் தெரிந்தது. trash-யில் இருக்கும் போஸ்ட்டில் இருக்கும் உங்கள் கமெண்ட்டை எப்படி மீட்பது? அல்லது அந்த போஸ்ட்டை restore செய்ய வேண்டுமா?
ஓ….இடுகையை மீட்காமல் மறுமொழியை மீட்க முடியாது. வேண்டுமானால் வெட்டி ஒட்டலாம். இருந்தாலும், முதல் மறுமொழி இட்ட பெருமை குமரேசனுக்குப் போய் விட்டது ஒரு வருத்தம் தான் 🙂