ஒரு காலத்தில் பாண்டிச்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ள கண் டாக்டர் தோட்டம் என்கிற பகுதி பாலியல் தொழிலுக்கும் ரவுடித்தனத்திற்கும் பேர் பெற்ற பகுதியாக இருந்தது. இங்கே சில வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். என்னுடன் பணபுரியும் பாண்டிச்சேரி நிருபர் அங்குள்ள மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். சந்துரு என்ற 20 வயது இளைஞன் எனக்கு அறிமுகமானது இப்படி தான்.
சந்துருவின் மீது பல அடிதடி வழக்குகள், திருட்டு வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு என பல வழக்குகள் இருந்தன. அந்தப் பகுதி இளைஞர்கள் பெரும்பாலும் அடியாட்களாய் தான் இருந்தார்கள். சிறு வயதிலிருந்தே இந்தச் சூழலில் வளரும் இளைஞர்கள் மிக சிறிய வயதிலே ரவுடித்தனத்தில் ஈடுபட தொடங்கி விடுகிறார்கள். பாலியல் தொழில் தரகர்களாய் சிறுவர்கள் தான் ஈடுபடுத்தபடுகிறார்கள். பாண்டிச்சேரி பஸ் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள பார்களிலோ திரியும் வெளியூர் சபல கேஸ்களைச் சிறுவர்கள் தங்கள் ஏரியாவிற்குப் பேசி அழைத்து செல்கிறார்கள்.… …மேலும் வாசிக்க






