புஷ்ஷின் மீது ஷு எறியபட்டதை பார்த்து சந்தோஷபட்டீர்களா நீங்கள்?

இன்று காலை நான் தூங்கி விழித்த போது என் படுக்கைக்கு நேர் எதிரில் இருந்த தொலைக்காட்சி பெட்டியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஈராக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் தனது ஷுவை எறிந்த காட்சி ஒளிபரப்பாவதை பார்த்தேன். இப்படியாக இந்த காட்சியை பார்த்து என்னுடைய நாள் தொடங்கியது குறித்து ஏனோ எனக்குள் ஒரு மகிழ்ச்சி. எதற்காக இந்த மகிழ்ச்சி?

இன்று முழுவதும் நான் சந்தித்த மனிதர்கள் பல பேர் இந்த காட்சியினை கண்டு சந்தோஷபட்டதை பார்த்தேன். யாரும் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர்கள் கிடையாது. உலகிலே மிகுந்த அதிகாரமுள்ள ஒருவர் மீது ஷு எறியும் துணிவுள்ளவரை பற்றிய வியப்பும் அல்ல இது. பலருடைய மனதில் இருக்கும் பெருங்கதையாடல் குறித்த கோபம் தான் இப்படி வெளிபடுவதாய் நினைக்கிறேன். அல்லது அதிகாரத்தின் மீதான சராசரி மனிதனுக்கு இருக்கும் கோபத்தின் வெளிபாடு தான் இந்த காட்சி குறித்தான மகிழ்ச்சி என்று நினைக்கிறேன்.

முன்டேசர் அல் சய்தி! ஈராக்கில் உள்ள அல் பாக்தாத்தியா என்கிற தொலைக்காட்சி நிறுவனத்தில் பத்திரிக்கையாளராக வேலை பார்த்து வருபவர். கடந்த வருடம் தீவிரவாதிகளால் கடத்தபட்டு மூன்று நாட்கள் கழித்து விடுவிக்கபட்டார்.

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து அடுத்த மாதம் விலக இருக்கும் ஜார்ஜ் புஷ் 2003-ம் ஆண்டு ஈராக் மீது படையெடுத்தது மூலம் அந்த பகுதியில் அதிகமாய் வெறுக்கபடும் மனிதராய் இருக்கிறார். இச்சூழலில் கடைசி முறையாக அமெரிக்க அதிபராக ஈராக்கிற்கு வருகை தந்த போது இந்த அவமானம் நிகழ்ந்தது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் புஷ் பேசி முடித்தவுடன் அல் சய்தி தனது இருக்கையிலிருந்து எழுந்திருத்து, “நாயே இந்தா எங்களது பிரிவு உபசார பரிசு,” என கத்தியபடி தனது இரண்டு ஷுக்களையும் ஒன்றன் பிறகு ஒன்றாக புஷ்ஷை நோக்கி எறிந்தார். புஷ்ஷின் மேல் அவை விழவில்லை. அவர் குனிந்து தப்பித்து கொண்டார்.

“ஈராக்கில் கொல்லபட்டவர்களுக்காக, அனாதை ஆக்கபட்டவர்களுக்காக, விதவையாக்கபட்டவர்களுக்காக,” என அல் சய்தி ஷுவை எறியும் போது கத்தினார்.  மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவரை பார்த்து ஷுவை காட்டுவது அவமானங்களின் உச்சம். அதை விட அவமானத்தின் உச்சம் ஒருவர் மீது ஷுவை எறிவது.

இப்போது ஈராக்கில் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் அல் சய்தி ஒரு ஹீரோவாக பார்க்கபடுகிறார். பல இடங்களில் மக்கள் ஒன்று கூடி அல் சய்தி விடுதலை செய்யபட வேண்டுமென போராட்டம் நடத்துகிறார்கள்.  சவுதியில் உள்ள சமூக அரசியல் பேராசிரியர் காலித் அல் தக்கில் என்பவர் இந்த சம்பவம் புஷ் ஈராக்கில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் எதிரொலி என குறிப்பிட்டு இருக்கிறார்.  நீங்கள் சந்தோஷப்பட்டீர்களா? அல்லது புஷ்ஷிற்காக பரிதாபப்பட்டீர்களா? காட்சியை கண்டவுடன் அடுத்த நொடி உங்கள் மனதில் தோன்றிய உணர்ச்சியை கேட்கிறேன்.


Comments
17 responses to “புஷ்ஷின் மீது ஷு எறியபட்டதை பார்த்து சந்தோஷபட்டீர்களா நீங்கள்?”
  1. I AM NOT HAPPY OVER THE INCIDENT. I WAS NOT HAPPY EITHER WHEN RAJI GHANDI WAS ATTACKED BY THE SINGALESE LUNATIC.

  2. அந்த செய்தியை கேட்டவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன்!அவரது இரண்டு ஷூக்களும் குறி தவறியதால் மிகவும் வருத்தப்பட்டேன் ! 😉

  3. கிரி Avatar
    கிரி

    Ithu enna kaelvi.Rombavae santhosappattaen.

  4. ரிஷி (கடைசி பக்கம்) Avatar
    ரிஷி (கடைசி பக்கம்)

    I am not happy!!!!1. because the target missed.2. Same time ‘m feel for Bush also how he felt that time?

  5. Anonymous Avatar

    ithu migavum thavaranathu avar kutram seithavaraka irunthalum avar oru nattin athipar avauruke intha nilamai endral muslim nadukalil matravarkalin nilamai enna?

  6. நான் Avatar
    நான்

    அந்த செய்தியை கேட்டவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன்!அவரது இரண்டு ஷூக்களும் குறி தவறியதால் மிகவும் வருத்தப்பட்டேன் ! 😉 கவலை படாதீர்கள்…அது புஷ்ஷை தாண்டி அமெரிக்க கொடியின் மீதுதான் பட்டது…

  7. // Anonymous said… ithu migavum thavaranathu avar kutram seithavaraka irunthalum avar oru nattin athipar avauruke intha nilamai endral muslim nadukalil matravarkalin nilamai enna?//ரொம்ப நல்லவரே..இந்திய நாட்டில் இந்திரா காந்தி என்ற ஒரு பிரதமரையே ஒரு இந்தியரே சுட்டு கொன்றாரே.. அப்படியானால் இந்தியாவில் மற்றவர்களின் நிலை என்னவோ அதே தான் அங்கும்.எந்த மதத்தவனாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவன் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும்.

  8. //அந்த செய்தியை கேட்டவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன்!அவரது இரண்டு ஷூக்களும் குறி தவறியதால் மிகவும் வருத்தப்பட்டேன் ! 😉 கவலை படாதீர்கள்…அது புஷ்ஷை தாண்டி அமெரிக்க கொடியின் மீதுதான் பட்டது…//😉

  9. Shakthiprabha Avatar
    Shakthiprabha

    புஷ் தாக்கப்பட்டதைப் பார்த்து சந்தோஷப்படுவதா வருத்தப்படுவதா என்ற வாதம் இருக்கட்டும்….கிட்டத்தட்ட உலகின் அனைத்து தலைவர்களும் அடிக்கவேண்டிய பட்டியலில் இருக்கிறார்கள் (வேவ்வேறு ஆட்களின் பார்வையில்) அவர்களையும் கூட இப்படி செய்தால் அடிபடாத தலைவன் என்று ஒருத்தராவது இருப்பாரோ?

  10. Eventhough angle missed… This incident is better than nothing. Actullay this incident is not just like something, IT’S A GREAT THING. Hats Off and my Salute to you Mr. MUNTADAR AL-ZAIDI

  11. எனக்கு ஒரு வருத்தம்.குறி தவறியது.ஆனால் எனக்கு சந்தோசம் அளிக்கக்கூடிய விசயங்களும் உள்ளன.அது ஏகாதிபத்தியமே தன் பதவிக்காலத்தின் குறிக்கோள் என்று அலைந்த புஷ்ஷிற்கு கிடைத்த கடைசி நேர சவுக்கடி.இதற்கு மேலும் இவருக்கு அவமரியாதை வேண்டியதில்லை.உள்நாட்டிலும் மரியாதையை இல்லை.வெளிநாட்டிலும் மரியாதை இல்லை.மேலும் அமெரிக்கா நாட்டு கொடியின் மீது சூ பட்டது தன் எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.சே குவரோ சொன்னார் “அமெரிக்கா ஒரு கழுதைப்புலி.அதன் ஏகாதிபத்தியத்தை அதன் நாட்டில் வைத்தே வேரருப்பேன்.”அமெரிக்கா இன்னும் மாறவில்லை.

  12. Ayyo paavam! Antha nirubar shoe-va intha alavuku kevala paduthi iruka vendaam

  13. Anonymous Avatar

    புஷ்யை சுவால் தாக்கியதை கண்டு ஏதோ ஒரு மகிழ்ச்சி .ஒரு நாட்டையே அழித்து சினாபின்ன மாகி விட்டான் .

  14. சுமார் நாற்பது அடி தூரத்தில் இருந்து சரியாக இலக்கை நோக்கி இரு முறை வீசப்பட்ட செருப்புகள்! இதற்கே பத்து முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தரலாம். இது தனி மனிதனின் உணர்வின் வெளிப்பாடு மட்டுமல்ல.. உலகெங்கும் உள்ள, ஏன் அமெரிக்காவிலுள்ள மனித இதயம் கொண்டவர்களையும் மகிழ்விக்கும் ஒரு மகத்தான 24/7.

  15. it should be 9/11

  16. தெய்வமகன் Avatar
    தெய்வமகன்

    நான் ஒரு எழுத்தாளன் என்ற முறையில் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.ஒரு பத்திரிக்கையாளன் தன் உணர்ச்சிகளை காட்ட வடிகாலாக பேனாமுனையில் மையை எரிய வேண்டுமே அல்லாமல் எரியவேண்டியதில்லை.இதுவரை எந்த தலைவரையும் நெருங்கும் ஆற்றல் கொண்டவனாக இருந்த பத்திரிக்கையாளனுக்கு ஏற்பட்ட களங்கம் என்றே நான் நினைக்கிறேன்.எதனை பேர் இலங்கை ராஜபக்ஷேவை செருப்பில் அடிக்க ரெடியாக இருக்கிறீர்கள்.நான் அதை விரும்பவில்லை.ஆனால் எல்லோரும் இப்படித்தான் தங்கள் எதிர்ப்பை கான்பிக்க வேண்டும் என்றால் அதற்குபின் பத்திரிக்கையாளனுக்கு ஒரு மரியாதையும் கிடையாது.

  17. தெய்வமகன் Avatar
    தெய்வமகன்

    நான் ஒரு எழுத்தாளன் என்ற முறையில் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.ஒரு பத்திரிக்கையாளன் தன் உணர்ச்சிகளை காட்ட வடிகாலாக பேனாமுனையில் மையை எரிய வேண்டுமே அல்லாமல் எரியவேண்டியதில்லை.இதுவரை எந்த தலைவரையும் நெருங்கும் ஆற்றல் கொண்டவனாக இருந்த பத்திரிக்கையாளனுக்கு ஏற்பட்ட களங்கம் என்றே நான் நினைக்கிறேன்.எதனை பேர் இலங்கை ராஜபக்ஷேவை செருப்பில் அடிக்க ரெடியாக இருக்கிறீர்கள்.நான் அதை விரும்பவில்லை.ஆனால் எல்லோரும் இப்படித்தான் தங்கள் எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்றால் அதற்குபின் பத்திரிக்கையாளனுக்கு ஒரு மரியாதையும் கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.