விடுதலைப்புலிகளின் தற்போதைய வீழ்ச்சிக்கு பல காரணங்களை பல நிபுணர்கள் விவாதிக்கக்கூடும். ஆனால் நான் சொல்லும் காரணம் சற்று வேறு வகைப்பட்டது. கண்ணுக்கு எளிதில் புலப்படாதது. ஆழ்ந்து பார்க்கின் பின்புலத்தில் இருந்தவாறு காட்சிகளை இயக்கும் வல்லமை படைத்தது.
தேசியத்தின் எழுச்சி
பனிப்போர் நடந்த காலத்தில் அமெரிக்க அரசும் சோவியத் யூனியனும் உலகத்தை இரு நிலைகளாக வைத்திருக்க முயன்றன. இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் மற்றொரு நாடு அரசியல் செய்ய முயன்றது. இதன் காரணமாக உள்நாட்டு கலகங்களுக்கு வெளியுலக அங்கீகாரமும் ஆதரவும் இருந்தன.
ஆப்கானிஸ்தானில் தாலிபானின் முன்னோடிகளை வளர்த்தது அமெரிக்கா தாம். சோவியத் யூனியனுக்கு எதிராக தாலிபானின் முன்னோடிகள் உருவானார்கள். இன்று சீனா இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் கலகக்காரர்களை வளர்த்து விடுவதும், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் கலகக்காரர்களை ஆதரிப்பதும் இதன் நீட்சிகளே. இந்த போக்கு இன்னும் தொடர்கிறது என்றாலும் இன்று அதனை வெளிபடையாக செய்ய இயலாத நிலை தோன்றியிருக்கிறது. காரணம் பனிப்போர் ஓய்ந்த பிறகு ஒரு நாட்டு அரசாங்கத்தின் அதிகாரம் பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது.… …மேலும் வாசிக்க






