Month: August 2012

  • கசாப்பிற்குத் தூக்கு வேண்டாம்

    குற்றம் சாட்டபட்டவர் கொடூரமானவராக இருப்பதினால் தூக்கு தண்டனையை ஆதரிக்க வேண்டுமென்று எதுவுமில்லை. மாறாக குற்றத்தின் தன்மை மிக கொடூரமாக இருக்கிற காரணத்தினாலே மரண தண்டனையை எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. கொடூரமான பயங்கரவாதி, குழந்தைகளைப் பலாத்காரபடுத்தி கொன்றவன் இப்படிபட்டவர்களுக்கும் கூட மரண தண்டனை தரக்கூடாது என சொல்வதில் தான் தொடங்குகிறது மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம். எத்தனை கொடூரமான குற்றவாளியாக இருந்தாலும் மரண தண்டனை என்பது கிடையாது என்பதே மனித உரிமைகளை முன்னெடுக்கும் சமூகத்தின் அடையாளமாக இருக்க…

  • அனல் ஆறு

    மலை உச்சியில் பெருங்கூட்டம். எல்லாரும் முண்டியடிக்கிறார்கள் பள்ளத்தாக்கில் அனல்கங்குகளைச் சுமந்து ஓடும் ஆற்றினைக் காண. பெருத்த முலைகளையும் முட்டும் தொப்பைகளையும் தள்ளியபடி முரட்டு யானைகள் போன்ற பெண்கள் கூட்டமொன்றில் அரைபட்டு முன்னேறி கொண்டு இருக்கிறேன் நான்.

  • ரத்தத் துளிகள்

    ரயிலோ இல்லையோ பாலத்தின் எதோ ஓரிடத்தில் இருந்து ரத்தத் துளிகள் விழுந்தபடியே இருந்தன சாலையில் வருவோர் போவோர் வெகு சிலர் மீது.

  • ஜனாதிபதி பதவி தேவையா?

    ஜனாதிபதி பதவி தேவையா?

    ஜனநாயகம் என்கிற கருத்தாக்கம் மேலும் மேலும் மேம்பட்டபடியே இருக்க வேண்டும். தவறுகளைக் கண்டு திருத்தி, விவாதித்து எப்போதுமே கூர் தீட்டபட்டு கொண்டிருக்கிற ஜனநாயகமே ஆரோக்கியமானது. சடங்குகள் என்பதும் அலங்காரங்கள் என்பதும் இனி தேவை இல்லை. ஆயில் ஊற்றி என்ஜின் சரி செய்து சின்ன பிசிறு இல்லாமல் ஜனநாயகத்தை இயக்க வேண்டிய காலகட்டத்தில் குடியரசு தலைவர் பதவியும் அதைப் போன்ற மற்ற வெற்று அலங்கார பதவிகளும் இனி இந்த நாட்டிற்கு வேண்டாம் என முடிவெடுக்கலாம்.

  • வலியே வலியை மறக்க வைக்குமளவு

    வலியே வலியை மறக்க வைக்குமளவு அடிக்கப்பட்டு உள்ளெல்லாம் சிதைந்து நாளெல்லாம் மரணத்தை வேண்டி நிற்கும்