Month: July 2012

  • காற்றில் சலசலக்கும் மரம்
    சலசலப்பை உண்டாக்குகிறது
    என்னுள்.
    இலைகளின் மீட்டலை
    உணர்கிறேன்
    நரம்புகளில்.
    காம்புகள் வளைவது
    சப்திக்கிறது
    என் எலும்புகள் ஊடாக.
    எறும்புகளின் காலடிகளை
    முதுகில் சுமக்கிறேன்.
    சருகுகளை
    ஆனந்தமாய்
    உதிர்க்கிறேன்.
    கவிழ்ந்த பூக்களின்
    மகரந்தங்களோடு
    காற்றில்
    பரவுகிறது எனது விந்தணுக்களும்.
    இது வெறுமையை உணர்ந்த கணம்;
    கடவுளைக் கண்ட கணம்;
    என் ஆதியை மீள்தொட்ட கணம்.
    பிரபஞ்சம் நானே!


  • இரவு விளக்கு
    சுவரெல்லாம் ஊர்ந்து
    புது புது ஓவியங்களைத்
    தீட்டி காட்டுகிறது.
    உருவாகும் ஓவியங்கள் உருக்குலையும் முன்னே
    என் நினைவலையில்
    இருந்து
    எதோ ஒரு சரடினை
    இழுத்து
    அறையெங்கும் தவழ விட்டு செல்கிறது.

    புகை மண்டிய பிறகு
    கணவனின் குறட்டை மட்டுமே
    எனது படுக்கையறையை நிரப்பி இருக்கிறது.